புதன், 30 ஜனவரி, 2013

அக்னி ஹோத்திரம்


“ஓம் பூர் புவஹ ஸ்வஹ
தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்”
(எந்தஒளி நம் அறியாமை என்னும் இருளைப்போக்கி நம் அறிவுச்சுடரை தூண்டுகிறதோ அந்த மேலான ஒளியை தியானிப்போமாக!)
இன்றைய உலகில் மனிதன் மனஅழுத்தத்தாலும் பல்வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டு பிரச்சனைகளால் துன்பப்படுகிறான். நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் மாசுபட்டுவிட்டது. மனிதன் விஷக்காற்றை சுவாசித்து நோய்களால் வாடுகிறான். காற்று அந்த அளவுக்கு மாசுபட்டுவிட்டது. இந்த மாசுக்களை நீக்கவும், நாம்இந்த பூமியில் பிறந்ததால் ஏற்பட்ட பிறவிக்கடனை தீர்க்கவும், பஞ்சபூதங்களுக்கும் முழுமையான பிரதி உபகாரம் செய்யவும் நாம் செய்யவேண்டிய இன்றியமையாத கடமைதான் அக்னிஹோத்திரம் எனும் எளிய வேள்வியாகும். இவ்வேள்வியின் போது எழும் புகையானது நோய்களைக் குணமாக்கி, மனதை செம்மைப்படுத்துகிறது. சுற்றுச்சூழலை முற்றிலும் தூய்மையாக்குகிறது. தாவரங்களைச் செழிப்பாக வளரச்செய்கிறது. நோய்களுக்கு அக்னிஹோத்திர சாம்பல் மருந்தாக பயன்படும். நீரில் இச்சாம்பலைக் கலந்தால் நீர் சுத்தமாகிவிடும். எனவே இந்த அற்புத வேள்வியை தினமும் செய்யவேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகிறது.

செய்முறை – (தேவையான பொருட்கள்)

சரியான அளவில் செய்யப்பட்ட செப்பு பிரமிடுவடிவ பாத்திரம். (semi copper pyramid pot) பசு நெய் வைக்கக் கிண்ணம், நெய் ஊற்றும் கரண்டி, பாத்திரம் வைக்கும் ஸ்டாண்டு.

சுத்தமான பசுவறட்டி - பசுவறட்டி பசுமாட்டின் தனி சாணத்தில் இருந்து தயாரிக்கவேண்டும். வேறு எதுவும் சாணத்தில் கலக்கக்கூடாது.
பசுநெய் - பசுநெய் மிகவும் தூயதாக இருக்கவேண்டும்.
முழுப்பச்சரிசி - கல், குருணை நீக்கப்பட்டு முனைமுறியாமல் முழு அரிசியாக இருக்கவேண்டும். செந்நிறமுள்ள சிவப்பு அரிசி (brownrice) சிறந்தது.
அக்னிஹோத்ரா வேள்வி தினமும் காலை ஸுர்யஉதய, அஸ்தமன வேளையில் செய்யவேண்டும்.

எளியசெய்முறை விளக்கம்:


அக்னிஹோத்ர பாத்திரத்தில் முறையாகப் பசுஞ்சாண வறட்டியை அடுக்கி அக்னியை வளர்க்க வேண்டும். பின்பு சரியான ஸீர்ய உதய நேரம் வந்தவுடன் கீழக்கண்ட மந்திரத்தைக் கூறி நெய் கலந்த அரிசியை அக்னியில் இடவேண்டும்.

காலை ஸீர்ய உதய மந்திரம்:

ஸீர்யாய ஸ்வாஹா ஸீர்யாய இதம் நமம! (ஒருபாகம் நெய்கலந்த அரிசியை அக்னியில் போடவும்)
ப்ரஜாபதயேஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் நமம!

மாலைஸீர்ய அஸ்தமன நேரத்தில்:

அக்னயே ஸ்வாஹா அக்னயே இதம் நமம! (ஒரு ஸ்பூன் நெய்கலந்த அரிசியை அக்னியில் இடவும்)
ப்ரஜாபதயேஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் நமம! (ஒரு ஸ்பூன் நெய்கலந்த அரிசியை அக்னியில் இடவும்)
அக்னி ஜ்வாலை தானாக அணைந்தவுடன் சிறிது நெய்யை அவிசுகளின் மீதுவிட்டு ‘ம்ருத்யுஞ்சய மந்திரம்’ கூறி வேள்வியை முடித்துவிடலாம்.

ம்ருத்யுஞ்சய மந்திரம்:

ஓம் த்ரயம்பஹம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாரு கமிவ பந்தனாத் ம்ருத்யோர் முஷிய மாம்ருதாத்!
(காலை, மாலை இரண்டுக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரம் பொதுவானது)
வேள்வியை செய்தவுடன் தியானம், மூச்சுப்பயிற்சி, பிராத்தனைகள் செய்யலாம். நம்முடைய வாழ்க்கை தேவைகள், காரியத்தடைகள் எல்லாவற்றையும் அக்னிமுன்பு சமர்ப்பணம் செய்து கொள்ளலாம். இதன்மூலம் நம் வாழ்வை வளப்படுத்தி ஆரோக்கியம், மனஅமைதி, மற்றும் காரியத்தில் வெற்றியும் பெறலாம். அக்னிபரிசுத்தத்தின் அடையாளம். உன்னதமான தூதுவன். எனவே எல்லாக்காரியங்களுக்கும் வெற்றி கிடைப்பது உறுதி.

வேள்வியை நிறைவுசெய்த பின்னர் பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே 3 மணிநேரம் வைத்துவிட வேண்டும். இதனால் தொடர்ந்து சூரியன், அண்டவெளியில் இருந்து காஸ்மிக் எனர்ஜி (cosmic energy) நிறைய கவர்ந்து இழுக்கப்படுகிறது. மிகச்சிறந்த ஆற்றல்தளம் அதைச்சுற்றிப் பரவுகிறது. வேள்விபாத்திரத்தைச் சுற்றி மற்றவர்களும், நோயாளிகளும் உட்கார்ந்து வேள்விப்புகையை நன்கு சுவாசிக்க நோய்கள் விரைந்து குணமாகும் நோய்எதிர்ப்புச்சக்தி அதிரிக்கும். சக்கரங்கள் தூண்டப்பட்டு மனஅமைதி உருவாகும்.
முனிவர்களும், ரிஷிகளும் தினந்தோறும் தங்கள் முதற்கடமையாக அக்னிவேள்வியை மேற்கொண்டனர். அக்னிஹோத்ரா வேள்வி சுற்றுப்புறத்தில் பெரும்மாற்றத்தை உருவாக்கி அமைதி நிலையை ஏற்படுத்துகிறது. பரிசுத்தமான சூழல் ஏற்படுகிறது. நம்முடைய உடலில் சக்கரங்களும், சுசும்பநாடி உட்பட எல்லா நாடிகளும் தூண்டப்படுகின்றன. இதன்மூலம் நாம் தெளிந்த சிந்தனையும், ஆழ்மனசக்தியையும் முழுமையாகப் பயன்படுத்தமுடியும். இத்தகைய அக்னிவேள்வி மூலமே முனிவர்களும், ரிஷிகளும் யோகம், தியானம், மந்திரங்கள் போன்றவற்றை ஞானதிருஷ்டி மூலம் உணர்ந்து உருவாக்கிவைத்தனர். தம்மைச்சுற்றியும், சுற்றுப்புறத்திலும் சக்திதளத்தை உருவாக்கினர். இதற்கு அக்னிவேள்வி தூண்டுகோலாகச் செயல்படுகிறது.  இன்று சாதாரண மனிதன் இதை தினந்தோறும் கடைபிடிப்பதன் மூலம் எல்லாவகையிலும் பயன்பெறமுடியும்! இன்றைய விஞ்ஞான யுகத்தில் மனிதனுக்கு பிரச்சனைகள், வாழ்க்கைத்தேவைகள், காரியத்தடைகள், துன்பமும், வறுமையும்  பெரும் சுமையாகிவருகிறது. இவற்றையெல்லாம் போக்கி அமைதியாகவும், எல்லாவளங்களும் பெற்று வாழ்வதற்கு ஒரே வழி அக்னிஹோத்ரா மட்டுமே! சிறந்த தீர்வாகும்.

வியாழன், 17 ஜனவரி, 2013

அதிர்ஷ்ட்டக் கற்களின் ரகசியங்கள்..

|
பிறப்பு ஜாத கத்தில் கிரகங்க ளின் நிலையை ஆரா ய்ந்து கோச்சாரம் நன்மை யைத் தருமென்பதை முடிவு செய்தல் அவசியம். உதாரண மாக, துலா ராசிக்கு, சனிப் பெயர்ச் சியின்போது ஏழரைச் சனியாக வந் துள்ளது. சனி பகவான் துலாத்தில்தான் உச்சம் பெறுகிறார். பொதுப்படையாக ஏழ ரைச் சனி கெடுபலன் என்று கூறுவதும் தவறு. உச்ச சனி அனைத்து துலா ராசிக்காரர்களுக்கும் அள்ளிக்கொடுக்கப் போகிறது என்பதும் தவறா னதே. அதற்காகப் பரிகாரங்களோ, பூஜைகளோ செய்யும்போது தனக்கு எவ்வாறு செய்வது என்று அறிந்து, புரிந்து அதன்படி செய்து நிச்சய பலன்  பெற வேண்டும்.

ஏழரைச் சனி என்ற உடனேயே நீலக்கல் அணிதல் கூடாது. முதலில் ஒரு ஜாதகரின் தசா புத்தியை ஆராய்ந்து, அந்தத் திசை நட்புத் திசையா, பகைத் திசையா என்றெல்லாம் பார்த்து, அந்தத் திசையின் அதிபதிக்கும், சனிபகவானுக் குமான நட்பை யோசித்தப் பிறகுதான் நீலக்கல் லைப் பரிந்துரை செய்யவேண்டும். நீலக்கல்லை கொடுக்கும் முன் அந்தக் கல் எவ்வளவு முற்றிய தன்மையினதாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து, எந்த பூமியில் விளைந்த இரத்தி னம் கொடுக்கவேண்டும் என்பதை முடிவு செய்து, ஜாதகரின் மற்ற நிலையை ஆரா ய்ந்தும் கொடுக்கும் போதுதான் ஜாத கர் பலன் பெற முடியும். இவ்வாறு தான் அனைத்துக் கிரகங்களின் கோச்சார நிலையில் இரத்தினம் கொடுக்கவேண்டும். பலருக்கு வாழ்நாள் முழுக்கக் கொடுக் கும் இரத்தினமே கோச்சாரத் திற்குப் பொருந்தும். சில ருக்கு கோச்சாரத்தில் தனி இரத்தினமே தேவைப் படும். அதனால் தான் பொதுப்படையாகக் கொடுக்காமல் அவரவர் ஜாதகத்தைத் துல்லியமாக ஆராய்ந்த பிறகே இரத்தினத் தைப் பரிந்துரை செய்ய வேண்டும்.

குருபகவானின் பெயர்ச்சி, ராகு-கேது எனும் சாயா கிரகங்களின் பெயர்ச்சி, சனி பகவானின் பெயர்ச்சியை மன தில் கொண்டு, முக்கியத்துவம் கொடுத்து, தனக்கு வரவிருக்கும் நன்மை, தீமையை ஆராய்ந்து, தீய பலன் எனில் தக்க சாந்திகளைச் செய்து, ஸ்லோகம் உச்சரித்து, கோயில்களுக்குச் சென்று, அந்நிலையிலான உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கான இரத்தினங்களை அணிந்து கொள்வ தனால் சிரமங்கள் வந்தபோதும் சூரியனைக் கண்ட பனிபோல் கெடுபலன் கரைந்துவிடும்.

அந்தக் கிரகங்கள் கொடுக்கும் கெடுபலனைத் தடுக்கவல்ல கிரகமும் குறைக்க வல்லவரும் குரு பகவான்தான்.

கெடுபலனைக் குறைக்கும் சக்தியும் குருபகவானுக்கு மட் டும்தான் உண்டு. ஜாதக ரீதியாக குருவின் பார்வை இருக்குமாயின், வாழ்க்கை எனும் படகு அழகாக நகர்ந்து செல்லும். அதனால்தான் `குரு பார்க்கக் கோடி நன்மை' என்பர். இவ்வளவு அழகான ராஜகுரு ஒருவரின் ஜாதகத்தில் சிறந்த பலன் கொடுக்கும் 2, 5, 7, 9, 11 ஆகிய இடங் களில் வீற்றிருக்கப் பெற்றவர்களாயின் கொடுத்து வைத்தவர்கள் எனும் அட்டவணை யின் கீழ் அடங்குவர்.
http://www.silverjewelrywholesales.com/wp-content/uploads/2010/04/Cubic_Zirconia_Gems_Stones.jpg
இவ்வாறு பார்க்கும் பொழுது, இராசியை மட் டும் பார்க்காமல் பிறப்பு லக்கினத்தையும் கணக்கில் கொண்டு பிறகே முடிவு எடுத்தல் அவசியம். லக் கினமோ, இராசியோ - ஏதாவது ஒன்றுக்கு குரு பார்வை கிடைத்தாலே சராசரி மனித வாழ்க் கையைவிட நல்லதொரு வாழ்க்கை நிலையை அடையலாம்.

பிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் - உங்களுக்கு தெரியுமா ???

 
 
 
பிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் - உங்களுக்கு தெரியுமா ???
கேள்வி :
 
1 பரிகாரம் என்ற முறையில் சாமி சிலை அல்லது நாக சிலையை வீட்டில் வைத்து ஒரு மண்டலம் பூஜை பண்ணலாமா ?? பின் சிலையை கோயிலில் சென்று வைக்கலாமா 
 அதன் சாதக பாதக முறை விளக்கவும்...
 
2  ஒரு குடும்ப வாழ்கையில் உள்ள ஒருவன்... ஒருவன் அடிக்கடி கோயில் கோயிலாக செல்லலாமா 
நண்பர் ஒருவர் மாதத்தில் 30 நாட்களில் 
ஒரு பௌர்ணமி 
ஒரு அம்மாவாசை 
இரண்டு பிரதோஷம்
நான்கு செவ்வாய் 
நான்கு வெள்ளி 
சதுர்த்தி 
ஒரு தேய் பிறை பூஜை 

இப்படி செல்லும் ஆட்கள் இருகின்றநேர்.. இவர்கள் கல்யாணத்திற்கு பிறகு கோயில் செல்வார.. பிசினஸ் கவனிப்பார ???
 
 
பதில் :
 

 
நண்பரே கணக்கு சூத்திரமே சரியாக தெரியாத என்னிடம் ,  பிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் பற்றி கேள்விகேட்டால், நான் என்ன செய்ய முடியும் ? ( இறைநிலையே என்னை காப்பாற்று ) மேலும் இதைப்பற்றி   சம்சார வாழ்வில் உள்ளவர் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது . 
 
இறைவன் நம்மை மனிதனாக பிறக்க வைத்தது எதற்கு என்றே தெரியாத  சிலர் இதுமாதிரி பல முயற்ச்சிகளை செய்துகொண்டு தானும் கெட்டு , தன்னை சுற்றியுள்ளவர்களையும் கெடுத்துகொண்டுதான் உள்ளனர்  இந்த பூமியில். 
 
 அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்ற மூத்தோர் வாக்கின் படி மனிதனாக பிறந்த இந்த பிறப்பே மிகவும் சிறப்பு  வாய்ந்தது , இந்த மனித வாழ்க்கையினை சிறப்பாக வாழ ஒவ்வொருவரும் அறிவின் வழியில் செயல்படுவது இந்த மனித வாழ்க்கையினை மேலும் சிறப்படைய  செய்யும் .
 
மேலும் இறைநிலையின் தத்துவத்தை உணராத அனைவரும் இந்தமாதிரி   மன நலம் கெட்டு பிதற்றிகொண்டு இருப்பதில் ஆச்சரியம் இல்லை என்பதே உண்மை . மேலும் இறைநிலை ஒவ்வொரு இடத்திலும் ,  ஒவ்வொரு ஜீவன்களிலும், எல்லா நிலைகளிலும் , எல்லா இடத்திலும் , உயிர் உள்ள , உயிர் அற்ற ஜீவன்கள் , பொருட்டகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து உள்ளார் , இதை உணர்ந்தவர்கள் இறைநிலை வேறு தான் வேறு என்ற எண்ணம் வர வாய்ப்பு இல்லை .
 
 மேலும் தான்னையே  சுவாமி , கடவுள் ,  அவதார புருஷன் , ஆத்த , ஒம்  சக்தி, பரமானந்தம் ,  அப்பா பகவான் , மற்றும் சுரைக்காய் கடவுள் , பாம்பாட்டி பைரவன் , சுங்குடி சுவாமி , என்று தன்னையும் ஏமாற்றி கொண்டு தன்னிடம் வருபவர்களையும் ஏமாற்றி கொண்டு இறுதியில் தீராத மான நோயால் பாதிக்கப்பட்டு கர்ம வினை பதிவை நீக்கி கொள்ள இயலாமல்  இறந்து போகின்றவர்களே அதிகம் .
 
 
எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு  .
 
 
கடவுள் என்பதின் அர்த்தம் தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விழிப்புணர்வு இல்லாமல் மூட நம்பிக்கையில் மூழ்கி திளைத்துகொண்டுதான் உள்ளனர்,   இந்த கலி யுகத்தில் .
கடவுள் பிரித்து பார்த்தாலே இதன் உண்மை தெரிந்து விடும் 
( கட+உள் ) உன்னில் இருக்கும் இறைநிலையை உள்நோக்கி பார்த்தாலே இறைநிலையின் ( கடவுள் ) தன்மை தெரிந்து விடும் .
இது எல்லோரிடத்திலும் உள்ள இறை சக்தி ( குண்டலினி ) இதை உணர சுய அறிவில் விழிப்புணர்வும் , சிறந்த  ஆன்மீக குருவின் வழிகாட்டுதலும் நிச்சயம் வேண்டும் , இந்த அமைப்பை பெற்றவர்கள் அனைவரும் பெரும் பாக்கியம் செய்தவர்களே .

நவகிரகங்கள் அனைத்தும் மனிதர்களுக்கு தங்களின் அலை கதிர்கள் மூலம் நல  வாழ்வினை தரும் அமைப்பை பெற்றவை , இதை ஒரு சிறு எடுத்துகாட்டு மூலம் விளக்கலாம் :
 
நமக்கு எதிரில் ஒரு சுவர் இருப்பதாக வைத்துகொள்வோம் அதை கிரகமாக பாவித்துகொள்க , அந்த சுவரில் இருக்கும் சுண்ணாம்பு கிரக சக்தியாக பாவித்து கொள்க . நாம் அந்த சுவரை  நாம் தொடாமல்  ( கிரகம் ) நமது  கைகளில் சுண்ணாம்பு ( கிரக சக்தி ) வாருவது எப்படி சாத்திய படும் ?

ஒரு பந்தை கொண்டு சுவற்றில் எறிந்தால் அந்த பந்து சுவற்றில்  பட்டு நமது கைக்கு வரும் அந்த பந்தில் பட்ட சுவற்று சுண்ணாம்பு ( கிரக சக்தி ) நமது  கைகளில் படும் இந்த முறையில் தொடர்ந்து செய்யும் பொழுது சுண்ணாம்பு ( கிரக சக்தி ) நமக்கு தேவையான அளவிற்கு நமது கைகளில் கிடைத்து விடும் . சரி அந்த பந்து எதுவென்று குழம்ப வேண்டாம் அது உங்களின் எண்ண ஆற்றலே ஆகும் , இது சுலபமாகவும் எளிமையாகவும் ஒவ்வொரு மனிதரும் நவகிரகங்கள் அமைப்பில் இருந்துவரும் சக்தியினை யாருடைய உதவியும் இன்றி பெற்றுகொள்ள இயலும் ஒரு எளிமையான வழிமுறை . 

கடவுள் சிலை , மற்றும் நவகிரகங்களை சிலையாக வீட்டில் வைத்து வழிபடுவதால் எவ்வித நன்மையையும் கிடைக்க வாய்ப்பு எனக்கு தெரிந்து இல்லை என்பதே உண்மை , மேலும் இதை செய்துவருபவர்களிடம்  கேட்டால் ஒருவேளை பதில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது நண்பரே !
 
 ஆகம விதிகளின் படி கடவுள் சிலை , மற்றும் நவகிரகங்களை சிலையாக  உயிர்களை ( உயிர்கலப்பு ) செய்து கோவில்களில் வழிபடுவதே சால சிறந்ததாக இருக்கும் என்பது எனது கருத்து . 
 
ஒரு வேலை சம்பந்தபட்டவர் நாக சிலையை வீட்டில் வைத்து ஒரு மண்டலம் பூஜை செய்வதைக்காட்டிலும் , ( காட்டில் இருக்கும் இரண்டு நாக பாம்புகளை கொண்டுவந்து வீட்டில் வைத்து பூசை புனஷ்காரம் செய்தால் விரைவில் பலன் தெரியும். சம்பந்த பட்டவர் பூசை போட்டால் பரவாஇல்லை , ஒருவேளை  இரண்டு நாக பாம்புகளும் சம்பந்த பட்டவரை போட்டு விட்டால்  நான் ஒன்றும் செய்ய முடியாது ) சாதகர் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு இருந்தால், தனது  தாய் வழி பெற்றோரையும்  , தனது  தந்தை வழி பெற்றோரையும் பேணி காப்பாற்றினால் நிச்சயம் சாதகர் ராகு கேதுவால் அதிக நன்மைகளை பெற முடியும் . 

மனிதர்களை இறைநிலை படைக்கும் பொழுதே ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையை செய்து மனிதகுலம் மேம்பட அறிவினையும் கொடுத்துள்ளார் , ஒரு விவசாயி விவசாய விளை பொருட்களை விதைக்காமல் , தானியம் வீட்டிற்கு வர வாய்ப்பில்லை, அவர் கடவுள் சிலையை வைத்துகொண்டு மாதம் முழுவதும் கடவுளை வழிபட்டுக்கொண்டு இருந்தால், மற்றவர்கள் உன்ன உணவிற்கு எங்கு செல்வது , அது போல் ஒவ்வொருவரும் தமது கடமைகளில் சரியாக செய்வதின் மூலம் கடவுளை காண இயலும் .
 
 ஒரு நாட்டின் அரசன் தனது ஆட்சியை செம்மையாக நடத்துவதின் மூலம் இறைநிலையை காணலாம் , ஒரு மந்திரி அரசனுக்கு நல்ல ஆலோசனை சொல்வதின் மூலம் இறைநிலையை காணலாம் , ஒரு தளபதி மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பார்ருவதின் மூலம் இறைநிலையை   காணலாம் , மக்கள் தமது கடமை சரிவர செய்வதின் மூலம் இறைநிலையை காணலாம்.
 
தமது கடமையே கடவுள் என் செய்து வருபவர்களுக்கு, கடவுள்  அவர்களுக்கு  தொண்டனாக மாறி தனது கடமையை செவ்வனே செய்வார் என்பது அனுபவ உண்மை .
 
மனிதனால் இறைநிலைக்கு எதுவும் கொடுக்க இயலாது , இறைநிலையால் மட்டுமே மானிதனுக்கு அனைத்தும் கொடுக்க இயலும் என்பதை நன்கு உணர்ந்து செயல் படுவது நலம் தரும் .
 
இறைநிலையின் கருணையை உணர்ந்து , நமது பெற்றோர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்வதும் , தமது இல்லத்து அரசிக்கு செய்ய வேண்டிய கடைமைகளை செவ்வனே செய்வதும் , தமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதும் . தம்மால் சமுதாயத்திற்கு இயன்ற அளவு நன்மை செய்வதும் ஒரு ஆண்மகனின் முக்கிய  கடைமையாகும்  .
 
வாழ்க்கையினை வாழ்ந்து பாருங்கள் நண்பரே !

புதன், 16 ஜனவரி, 2013

அனுமான் வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாக பிறந்தார். அஞ்சனாதேவியின் மகன் என்பதால் அஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். எங்கெல்லாம் ராமநாமம் சொல்லப்படுகிறதோ, எங்கெல்லாம் ராமனின்வரலாறு பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஆனந்தக் கண்ணீருடன் அனுமன் மெய்சிலிர்த்தபடி கேட்டுக் கொண்டிருப்பார் என்பது ஐதீகம்.

அதனால், ராமாயணத்தைப் பாராயணம் செய்பவர்கள் அனுமனுக்கு தனியாக ஒரு மணையை (பலகை) போடுவர். கண்ணுக்கு புலனாகாமல் சூட்சும உடலுடன் அனுமன் அந்த மணையில் அமர்ந்து ராமநாமத்தைக் கேட்பார். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவது போல காலங்காலமாகவே வரும் ஒரு பழக்கம். அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது.

பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு. அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் `ஜிவுஜிவு' என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது.

மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ப அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.

வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த போட்டியில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.

இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது ஐதீகம். அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள்

ஸ்தோத்திரத்தை

ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சூரிய பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சூரிய பகவான்

சீரருள் மிகச் சுரந்து செகத்துயிர் அனைத்துங் காக்கப்
பேரருள் பிதாவு மாகிப் பெருந்துன்ப இருளை யோட்டிக்
காரருள் சுகத்தை நல்கக் கதிர்களா யிரம்ப ரப்பும்
பாரருள் பிரிதிப் புத்தேள் பதமலர் சென்னி வைப்பாம்.

திங்கள் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சந்திர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சந்திர பகவான்

செழித்திடச் செல்வம் நல்கிச் செகத்துள் உயிர்கட் கெல்லாம்
வழித்திடும் பிதாவு மாகி வல்லிருள் தன்ன யோட்டித்
தழைத்திட அமுதமாகத் தக்கதோர் கதிர் பரப்பிப்
பொழிந்திடுஞ் சோமநாதன் பொற்பதம் தலைக்கொள்வோமே.

செவ்வாய் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் அங்காரக பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

அங்காரக பகவான்

வெற்றியும் வீரம் ஆண்மை விதரணம் பராக்கிர மங்கள
சுற்றமாம் தீரம் நல்கிச் சோதரன் தானும் ஆகிப்
பற்றிய பூமி யின்பம் பரன்பிரு தான்னியம் ஓங்கி
எற்றிசைப் புகழும் சேயின் இருபதம் தலைக்கொள்வோமே.

புதன் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் புத பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

புத பகவான்

இணக்கமாம் மகிழ்ச்சி இன்பம் இயலுறும் புத்தி யுக்தி
வணக்கமாம் கல்வி மேன்மை வருந்தனம் மகிழ்ச்சி புண்யம்
துணக்கமாம் பந்துவாகித் துலங்கிடச் சுகங்கள் நல்கும்
கணக்கனாம் எந்தை பாதம் கழலடி சென்னி வைப்பாம்.

வியாழக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

வியாழ பகவான்

பெருநிறை செல்வம் மேன்னை பெற்றிடுஞ் சுகங்கல்யாணம்
வருநிறை மரபு நீடி வாய்க்குஞ் சந்ததி தழைக்கத்
தருநிறை ஆடை ரத்னந்தான் பெற அருளும் தேவ
குருநிறை வியாழன் பொற்றாள் குரைகழல்! தலைக்கொள்வோமே.

வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சுக்ர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சுக்கிர பகவான்

திரைகடல் சூழம் பூமி சேர்த்திடும் உயிர்கட் கெல்லாம்
நிறைதரும் யோக போகம் நீடிய மனைவி இன்பம்
தரைபுகழ் வாகனங்கள் தக்கதோர் சுகத்தை நல்கும்
மறைமொழி புகரின் பொற்றாள் மலரடி தலைக்கொள்வோமே.

சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சனி பகவான்

கோரிய உலகத்தின்கண் குலவிய உயிர்கட்கெல்லாம்
மீறிடச் சுகமளித்து மெய்த்தளர் பிணியை நீக்கிச்
சீறிய துன்பந்தீர்ந்து சிறக்கத் தீர்க்காயுள் நல்கும்
காரியின் கமல பாதக் கடிமலர் தலைக்கொள்வோமே.

ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் ராகு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

ராகு பகவான்

பணியென உருவம் ஆகிப் பட்சமாய் அமுதம் உண்டு
தணியென உயிர்கட்கெல்லாம் தகும்படி யோக போகம்
துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும்
மணமுறும் இராகு பொற்றாள் மலரடி சென்னி வைப்பாம்.

ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் கேது பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

கேது பகவான்

மாதுமை பாகன் சொற்ற வரத்தினால் அமுத பானக்
கேதுவும் உடையனாகி எவ்வுயிர்களுந் தழைக்கக்
கோதிலா ஞானம் மோட்சம் குருபக்தி அருளும் நல்கும்
கேதுவாம் பகவன் பாதம் கிளர்முடி மிசைக்கொள்வோமே.

கந்த சஷ்டி கவசம்


காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

சக்தி வழிபாடு





சத்தியே தயாபரியே ஞானரூபி
சாம்பவியே மனோன் மணியே கபாலிசூலி
முத்தியே வேதாந்தபரையே அம்மா
முக்குணமே முச்சுடரே மாயாவீரி
வெற்றியே மூவர்களுக் கருளாய்நின்ற
வேணிகையே சாமளையே பொன்னேமின்னே
சித்திடையே சோதிடமும் முன்னுரையா
சின்மயத்தின் கணேசனுட காப்பாம்பாரே.


சக்தி என்றும் கருனை வடிவானவள் என்றும், ஞான வடிவினள் என்றும், ஜம்புகேசுவரரின் மனத்திற்குகந்த சாம்பவியென்றும், மனத்திற்கு மகிழ்ச்சித்தரும் சிந்தாமணி போன்ற அன்னையென்றும், கபாலியென்றும், சூலியென்றும் மூவுலகோர்க்கும் முத்தியருளும் வேதமுதலாகியும் முடிவாகியும் அமைந்த தாயென்றும், பரையென்றும் பலவாறாய் அமைந்து [சத்துவ, ராஜஸ, தாமஸம் ஆகிய] முக்குண வடிவானவளும், அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய முச்சுடர் ஆனவளும், மாயை வடிவினளும், வீரமுடையவளும் பிரம்மன், அயன், அரன் ஆகிய முத்தேவர்களுக்கும் வெற்றியினை நல்கவல்ல அருள் வடிவினராய் முறையே சரஸ்வதி, இலக்குமி,பார்வதி என்று எவ்வுலகும் பரவும் பராசக்தியே உன்றன் மின்னல் போன்ற இடையினிலே மகிழ்வுடனே சின்மய முத்திரையோடு வீற்றிருந்து அருளும் கணேசனது அருளால் இந்நூலினைப் படைக்கிறேன். [அவர் என்றென்றும் என் துணையிருப்பார்.]

இனி உலகனைத்தும் பலவாறாய்ப் பரவும் பரையே சக்தித்தாயே உன் மைந்தன் கணேசருடைய அருள் நோக்கால் நான் படைக்கும் இந்நூலை அவர் பரிவுடன் காப்பார். [எ-று]

ஜோதிடம் பயில்பவரும், சொல்பவரும் அன்னை பராசக்தியின் அருளைப் பெற அவளை ஏதாவது ஒரு ரூபத்தில் வணங்கி வழிபட வேண்டும். அன்னையின் அருளைப் பெறாமல் ஜோதிடராக முடியாது என்று புலிப்பாணி விளக்குகிறார்.

சந்திர பகவான்


(தயிர், சங்கு, பனி போன்று வேன்மையானவன், பார்கடலிலிருந்து தோன்றியவன், முயல் சின்னம் உடையவன், சேஷாமன் என்று வேதத்தில் அழைக்கப் பெறுபவன், சிவனது ஜடாமகுடத்தின் அணிகலன் அச்சந்திரனைப் பணிகிறேன்)

மனோகாரகனாக சந்திரனே உடலுக்கும் காரகனாவான், ஜோதிட சாஸ்திரத்திரன் ஒரு ஜாதகருக்குச் சந்திரபலமே மூலபலமாகும்.
ஜனைn லக்கினத்தைக் கொண்டு பலன்கள் சொல்லும்போது கூட சந்திர லக்னத்தையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது.
உலக வாழ்வுக்கு சரீர பலம் முக்கியம், சரீர பலத்திற்கு மனவளம் அடிப்படை சந்திரன் பலம் பெற்றிருந்தால் மேற்சொன்ன இரண்டையுமே அடைய முடியும்.
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்பது பழமொழி நம்முடைய சுபிட்சங்களுக்குத் தாயுமாக விளங்கும் சந்திரனே தாய்க்கும் காரகனாவான், கடல் கடந்த பயணத்திற்கும், கலைச் சுவை நிரந்த ரசனைக்கும் அறிவு, ஆனந்தம், புகழ், ஆற்றல், அழகு நடுநிலைமை, நறுமணம், சுகபோகம் முதலான அனைத்தும் இவனே காரகன்.
eசந்திரன் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டே தசை இருப்புக் கண்டு பிடிக்கப்படும். திருமணப் பொருத்தங்கள் சந்திறந்து சாரத்தைக்கொண்டே உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. முகூர்த்தங்கள் நிச்சயிக்கப்படுவதும் சந்திரனைக் கொண்டுதான்.
இந்தக் கிரகத்திற்குப் பகைவர்களே கிடையாது – ராகு, கேது என்கிற சாயாக்கிரகங்களைத்தவிர குரு-சுக்கிரன் இருவரோடு சேர்ந்தால், அல்லது பார்க்கப்பட்டால் அருளை வாரி வழங்குவது இவனது பண்பு.
இதர கிரகங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்து, மனிதனை வாழ வைக்கிற அருள் என்னும் குளிர் நிலவுக்கு உரைவிடமானவன் சந்திரன்.
ரிஷபம் உச்சவீடு கடகம் சொந்தவீடு விருச்சிகம் நீச வீடு.
பகை வீடு என்று ராசியில் ஒரு வீடும் சந்திரனுக்குக் கிடையாது.
ரோகினி, ஹஸ்தம், திருவோணம். இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் ஆவான் இவன். நாம் பிறக்கும் போது சந்திரன் இருந்த வீட்டைக் கொண்டே கோசாரப் பலன்கள் சொல்லப்பட்டு வருக்கின்றன.
வெண்ணிற ஆடை வெள்ளி இவற்றினை ஆள்கின்ற வெண்ணிறத்தோன் இவன். நவரத்தினங்களையும் ஆதரிப்பவன், நவரத்தினங்களில்-குறிப்பாகக், முத்து என்ற ரத்தினத்திற்கு நாயகன் உவர்ப்புச் சுவை இவனுடையது. ஆனால் குணம் இனிப்பானது.
சாத்வீக குணம் கொண்டவன்.
ஆண்-பெண் பாகுபாட்டில் பெண் கிரகம் இவன். சாலப் பிரதேசத்தில் ஆதிக்கமுடையவன். வடமேற்குத் திசை இவனுடையது.
வைசியப் பிரிவைச் சேர்ந்தவன்.
லக்கினத்திளிருந்து நான்காம் வீட்டில் இருந்தால் அதிக பலம் பெறுவான். பலவீனப்பட்ட சந்திரன் சலனத்தை உண்டாக்கக்கூடும்.
நான்கு உபாயங்களில் தானத்திற்குரிய இவன் சுபக்கிரகம் ஆவான்.
பற்று பாசம் உடையோர்க்கும். அரசாங்கம் கௌரவம் அடைவோர்க்கும், நிக்கதியாகத் தூங்குவோருக்கும் சந்திர பலம் இருக்கவே செய்யும்.
ஆரமுதுடன் அவதரித்தோன் இவன் என்பார்கள். தன கதிரோன் எனப்படும் இவன் காதல் களித்துவம், மென்மை, மெல்லியலார், இன்பம், இதயம் என்று நளினமான பல விஷயங்களுக்கும் காரகானாவான்.
பார்வைக்கு அழகான இவன் எல்லோராலும் விரும்பப்படும் ஏற்றம் உடையான்.
செல்வத்தைத் தருபவன் என்றும் வீர எழுச்சியைத் தூண்டுபவன் என்றும் இவன் புகழ் கூறுகிறது. யஜீர் வேதம்.
இறைவனது திருவிளிகளில் ஒரு வழியாக விளங்கும் இந்த சந்திரன், மூலிகைகளுக்கு அதிபன், ஆலயங்களில் பரிவார தேவதைகளிலும் இடம் பெறுவான்.
இரண்டு சக்கரங்கள் கொண்ட தேர் இவனுடையது சதுரப்பீடத்தில் அமர்வான்.
தீக்ஷிதர், “சுந்தரம் பஜமானஸ” என்று தொடங்கி இவனை பாடுகிறார். அதில் முருகனுக்கு முகமாக இருப்பவன் என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தம்.
இளங்கோவடிகள் “திங்கள் போற்தும்” என்று போற்றுகிறார்.
இதயத்தயை ஆள்கின்ற தன கதிரனாகிய இவனை உபாசனை செய்தால், இவ்வுலகில் பெறமுடியாத ஐசுவரியம் எதுவுமே இருக்க முடியாது. அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம்.
சூரியனார் கோவிலில் உள்ள சந்திரன் (மூலவர்) இவருக்கு அதிதேவதை, வருணன் பிரத்யதிதேவதை, கெளரிவாகனம் பத்து குதிரைகள் பூட்டிய விமானரதம், ராசி கடகம்
சிம்ம ராசிக்கு கணபதியின் மூல மந்திரம்
சக்தியாய்ச் சிவமாகித் தனிப்பர முத்தியான
முதலைத் துதி செயச் சுத்தி யாகிய
சொற்பொருள் நல்ழுவ சித்தி யானை
தன் செய்ய பொற்பாதமே
மந்திர சக்தி,யந்திரம்,யந்திரமுறைஅறு கோணச்சக்கரம்,திருநீறு,விஷ்ணு,லக்ஷ்மி கடாக்ஷம், ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்,ஸ்வாஹா,ஓம்க்லீம்,குரு ,மூல மந்திரம்,துளசி ,தாம்பூலம்,சந்தனம், குங்குமம்,


- இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் அடையலாம்.
அன்ன தானம்

   நம் வாழ்நாளில் நம்மால் முடிந்த அளவு மற்ற தானங்களுடன் அன்னதானமும் செய்ய வேண்டும். தானங்களின் மூலம் நமக்குக் கிடைக்கும் புண்ணியங்கள் நம்மை எந்த உலகிலும் நம்மைக் காத்து வரும். இந்த தானத்தை மஹேசனான சிவபெருமானின் சாட்சியாக செய்யும் தானம் என்பார்கள். ஆகவே அன்ன தானம் பெற்றுத் தரும் புண்ணியத்திற்கு அளவே இல்லை.
சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம் சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் நல்லது நட்பு வீடாக இருந்தாலும் நல்லது வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்க்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார் திடீர் பணவரவு இருக்கும். 
2-ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும் சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும் சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார். 
3-ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும். 
4-ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் 4 ஆம் வீடு வீட்டை குறிப்பதால் ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார். தாய்வழிச்சொத்து கிடைக்கும் கொடை குணம் இருக்கும். 
5-ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார் வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார். குழந்தைபாக்கியம் அமையும் ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும். 
6-ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு பண்னுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார். 
9-ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம் நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும்.
10-ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை தருவார். வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்னுவார். தாய்வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டுபண்னுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். 
11-ல் உள்ள சந்திரன் மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும். 
12-ல் உள்ள சந்திரன் பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை மங்க செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும்.
ராகுவைப் போலவே கேதுவும் நிழல் கிரகம் தான். ராகுவைப் போலவே ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருப்பார் கேது. ராகுவைப் போலவே இவரும் பின்நோக்கிச் செல்பவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது அந்த ராசிக்கான பலன்களை 3 மாதங்களுக்கு முன்கூட்டியே காட்டி விடுவார்.
கேதுவின் ஆட்சிக்கு உட்பட்டது மீனராசி. கும்ப ராசியில் உச்சம் பெறுவார். சிம்ம ராசியில் நீச்சம் அடைவார். மற்ற கிரகங்களைப் போலவே இவர் 7 ஆம் பார்வை பார்ப்பார். அதாவது தான் நிற்கும் ராசியில் இருந்தபடியே 7வது ராசியைப் பார்ப்பார். பொதுவாக, செவ்வாய் தரும் பலன்களை இவரும் தருவார். எனவே, 4, 7, 8 பார்வை செவ்வாயைப் போலவே கேதுவுக்கும் உண்டு. கேது தசை 7 ஆண்டுகள் நடக்கும்.
கேதுவின் பலன்கள்......
ஒருவர் ராசியில் கேது நிற்கும் சமயம் நன்றாக இருக்காது. முயற்சிகள் தடைபடும், வீண்பகை உண்டாகும். உடல் ஆரோக்கியம் கெடும். ராசிக்கு 3-இல் கேது வரும் சமயம் கவலைகளும், கஷ்டங்களும் இருக்கும். பணத்தைக் கெட்டதற்காகவே செலவு செய்வான். ஆனால், ராசிக்கு 3-இல் வரும்போது நல்ல நிலைமை உருவாகும்.
எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். மன அமைதியும் உடல் ஆரோக்கியமும் உண்டாகும். ஆனால், ராசிக்கு 4-இல் வரும் சமயம் அப்படியே எதிர் மாறாக நடக்கும். தீயோர் சகவாசத்தினால் பொருள் சேர்ப்பும், இழப்பும் இருக்கும். பணம் கையில் புழங்கும். ராசிக்கு 4-இல் வரும்போதும் அப்படித்தான்.
பகை, நோய், துயரம் எல்லாம் இருக்கும். ராசிக்கு 6-இல் வரும் சமயம் எல்லா கஷ்டங்களும் விலகும். பொருள் வசதி பெருகும். ஆரோக்கியம், ஆனந்தம் நிலவும். கேது 7-இல் வரும்போது காரிய தாமதம், குடும்பத்தில் சச்சரவு, நோய், கவலைகள் இருக்கும்.
8-க்கு வரும்போது மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 9-க்கு வரும்போது தொல்லைகள் இருக்கலாம். ஆனால், 10-க்கு வரும்போது நல்ல பலன்கள் உண்டாகத் தொடங்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் கேது, ராசிக்கு 12-இல் வரும்போது நண்பர்களால் பொருள் விரயம் எல்லாம் இருக்கும்.
கேது தோஷ பரிகாரம்..........
கேது பகவானுக்கு ஏதாவது ஒரு கிழமையில் அபிஷேகம் செய்விக்கவும். பலவர்ண ஆடை, வைடூரிய மணி, செவ்வல்லி மலர் ஆகியவற்றால் அலங்காரம் செய்யவும். கேது மந்திரங்களைச் சொல்லி தர்ப்பையினால் யாகத்தீயை எழுப்பி, கொள்ளுத் தானியம், கொள்ளுப் பொடி ஆகியவற்றால் ஆகுதி பண்ணவும். தீபாராதனை செய்யவும். கற்பூர ஆரத்தி எடுக்கவும். ராகம் தெரிந்தவர்கள் சண்முகப் பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடி வழிபடவும்.
கிரகங்களில் ராகுவை சாயா கிரகம் என்பார்கள். சாயா என்றால் நிழல். ராகு, மற்ற கிரகங்களைப் போல் பிரதட்சிணமாகச் சுற்ற மாட்டார். பின் நோக்கி அப் பிரதட்சிணமாகச் சுற்றுவார். ஒரு ராசியில் ராகு ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருப்பார். சனிக்கு அடுத்தப்படியாக நீண்ட காலம் ஒரு ராசியில் தங்குபவர் ராகுதான்.
ராகுவுக்கு என்று தனி சக்தி இல்லை. இவர் சார்ந்துள்ள கிரகங்களின் அடிப்படையில் இவருக்குச் சக்தி உண்டாகும். என்றாலும் இவருக்கென்று சில தனித் தன்மையும் உண்டு. ஆனாலும் தாமஸகுணம் கொண்டவர். ராகுவின் ஆட்சி வீடு கன்னி. விருச்சிகத்தில் ராகு உச்சம் பெறுவார். ரிஷபத்தில் நீச்சப்படுவார்.
கடகம், சிம்மம் இவற்றைத் தவிர மற்ற கிரகங்கள் ராகுவுக்கு நட்பு வீடுகள். ராகு ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்குச் செல்லும் போது, போகும் இடத்தில் தரக்கூடிய பலன்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தெரிய வரும். ராகு தசை 18 ஆண்டுகள் இருக்கும் கிட்டதட்ட சனி தரும் பலன்களையே இவரும் தருவார்.
ராகுவின் பலன்கள்........
ஒருவர் ராசியில் ராகு வந்து தங்கும் சமயம் பந்த பாசங்களில் மனக்கசப்பு உண்டாகும். தவறான வழிகளில் வந்த பணத்தால் நோய் வந்து செலவை ஏற்படுத்தும். சுபர் பார்த்தால் தீயவை அனைத்தும் மாறி நல்லது நடக்கும். ராசிக்கு 2-இல் ராகு வரும்போதும் இப்படித்தான் இருக்கும். ஆனால், ராசிக்கு 3-இல் ராகு வரும் போது நிலைமைகள் சீரடையும்.
தொடங்கும் காரியம் சிறப்படையும். வசதிகள் பெருகும். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். தீய குணங்கள் விலகி நல்ல குணங்கள் உண்டாகும். ராசிக்கு 4-இல் ராகு வரும்போது குடும்பம் அமைதி இழக்கும். சிலருக்கு இடமாற்றம் இருக்கும். ராசிக்கு 5-இல் வரும்போது இந்த விரும்பத் தகாத சூழ்நிலை நீடிக்கும்.
ஆனால் ராசிக்கு 6-இல் ராகு வரும் சமயம் நிலைமை சீரடையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தீய குணங்கள் விலகி, நல்ல குணமுடையவனாவான். ராகு, ராசிக்கு 7-இல் வரும்போது கெட்டவர்களின் சகவாசத்தால் துன்பங்கள் உண்டாகும். இடம் விட்டு இடம் செல்ல நேரிடும்.
ராசிக்கு 8-இல் வரும் சமயம் எடுத்த காரியங்களில் தடைகள் வந்தாலும் சுபக்கிரகங்கள் பார்த்தால் தடைகள் நீங்கி காரியங்கள் வெற்றி பெறும். ராகு 9-இல் வரும்போது விஷக்கடியால் துன்பம் ஏற்பட்டு சுகமாகும். 10-இல் வரும்போது செலவுகள் அதிகமாகும். குரு பார்த்தால் குறைகள் நீங்கி நிறைந்த பலன் கிடைக்கும். 11-இல் வரும்போது நன்றாக இருக்கும்.
பொருளாதாரம் சீரடையும், உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் 12-இல் நன்றாக இருக்காது. குடும்ப அமைதிய கெடும். மருத்துவச் செலவு ஏற்பட்டு, பொருள் நஷ்டம் உண்டாகும். கஷ்டங்களும், கவலைகளும் இருக்கும். ஆனாலும் சுபவலிமைபெற்ற கிரகங்கள் சேர்க்கையிருந்தால் கஷ்டங்கள் தீரும். நன்மை உண்டாகும். 
ராகுதோஷ பரிகாரம்........
ராகு பகவானுக்கு ஏதாவது ஒரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கறுப்பு வஸ்திரம், கோமேதக மணி, நீலமந்தாரை, இலுப்பைப் பூ ஆகியவற்றால் அலங்காரம் செய்யவும். ராகு ஸ்துதி செய்து அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி, உளுந்து தானியம், உளுத்தம் பருப்புப் பொடி அன்னம் இவற்றால் ஆகுதி பண்ணவும். தீபாராதனை செய்யவும். ராகு கீர்த்தனைகளை ராகப் பிரியா ராகத்தில் பாடி வழிபடுவது

செவ்வாய் பகவான் தரும் மங்கள வாழ்வு !



கால புருஷ தத்துவத்திற்கு முதல் வீட்டிற்கும் , எட்டாம் வீட்டிற்கும் , அதிபதியாக வரும் செவ்வாய் பகவான்,  இயற்கையில் அனைவரின் ஜாதக அமைப்பிற்கும் உயிர் , ஆயுள், தனது வாழ்க்கை துணையின் மூலம் அதிர்ஷ்டம் பெரும் அமைப்பு , உடல் ஆரோக்கியம் , வீரம் , குடியிருக்கும் வீட்டின் தன்மை , ஜாதகரின் குண இயல்பு , ஒழுக்கம் , போராட்ட குணம்  அதனால் வரும் நன்மை , திடீர் மக்கள் செல்வாக்கு , மன உறுதி , வாழ்க்கையில் வரும் திடீர் முன்னேற்றம் , அயராத உழைப்பு திறன் , தொழில் நுட்ப ஆற்றல் , தொழில் துறையில் சிறந்து விளங்கும் ஆற்றல் , சிறந்த நிர்வாக  திறமை , மற்றவர்கள் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தை தரும் அமைப்பு , போன்ற விஷயங்களை 100  சதவிகிதம் விருத்தி செய்து தரும் அமைப்பை பெற்றவர் ஆகிறார் .

செவ்வாய் பகவான் நல்ல நிலையில் ஒரு ஜாதக அமைப்பில் அமரும்பொழுது மேற்கண்ட பலன்களை விருத்தி செய்து தருவதில் செவ்வாய் பகவானுக்கு நிகர் அவரே ! இருப்பினும் அதிக நன்மையான பலன்களை, செவ்வாய் பகவானால் நன்மை  அனுபவிக்கும் சில அமைப்பை பற்றி, இந்த பதிவில் காணாலாம் , மேலும் சிலர் இந்த செவ்வாய் பகவான் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12 ம் பாவகங்களில் அமரும்பொழுது செவ்வாய் தோஷம் தரும் என்று பலனை நிர்ணயம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றியும் சற்றே சிந்திப்போம் .

எந்த லக்கினம் என்றாலும் , செவ்வாய் பகவான் தனது வீடுகளான மேஷம் , விருச்சக பாவகங்களுக்கு , 2 , 5 , 6 , 8 , 9 , 12 வீடுகளில் அமர்ந்தால் மட்டுமே , மேஷம், விருச்சக ராசிகள் எந்த பாவக அமைப்பை பெறுகிறதோ அந்த பாவக வழயில் இருந்து ஜாதகர் தீமையான பலனை அனுபவிக்க வேண்டி வருகிறது , மேலும் அந்த பாவகங்கள் சர ராசியாகவோ , பாதக அமைப்பை பெரும் பொழுது மட்டுமே ஜாதகர் அந்த வகையில் இருந்து தீமையான பலனை அனுபவிக்க வேண்டி வருகிறது .

எடுத்து காட்டாக :
                               
ஒரு மேஷ இலக்கின ஜாதகருக்கு , செவ்வாய் லக்கினத்தில் இருந்து 2 ல் அமரும்பொழுது தனம் ,குடும்பம் ,வாக்கு என்ற அமைப்பில் தீமையான பலனையும் , 5 ல் அமரும்பொழுது பூர்விகம் , குழந்தை பாக்கியம் ,பரதேஷ ஜீவனம் என்ற அமைப்பில் தீமையான பலனையும் , 6 ல் கடன் , உடல் நோய்,மன நோய் , உடல் உபாதை, சிறு இழப்பு என்ற அமைப்பில் தீமையான பலனையும், 8 ல் திடீர் பேரிழப்பு , விபத்து , எதிர்பாராத இழப்புகள் , தற்கொலை செய்துகொள்ளும் மன நிலை, என்ற அமைப்பில் தீமையான பலனையும் . 


9 ல் பொதுகாரியங்களில் கெட்ட பெயர் , மரியாதை இன்மை , பொது மக்களால் பாதிப்பு , சமுதாயத்தில் பெயருக்கு களங்கம் என்ற அமைப்பில் தீமையான பலனையும், 12 விரக்தி மன நிலை , மன போராட்டம் , உணர்ச்சி வசப்படுவதால் இழப்பு , தூக்கம் இன்மை , சரியான வயதில் எவற்றையும் அனுபவிக்கும் யோகம் அற்ற நிலை அனைத்திலும் தாமதம் என்ற அமைப்பில் தீமையான பலனையும் ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் , அதிலும் குறிப்பாக இந்த லக்கினத்திற்கு 5 ம் பாவகத்திலும் , 8 ம் பாவகத்திலும் செவ்வாய் அமரும்  பொழுது பலன்கள் கொஞ்சம் கடுமையானாதாகவே இருக்கிறது , லக்கினாதிபதி என்றாலும் ஜாதகருக்கு இந்த பாவக அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் தீமையான பலன்களை தருகிறார் . மற்ற பாவகங்களில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு மிக சிறப்பான யோக பலன்களை தருவதில் தவறுவதில்லை .

மேற்கண்ட முறையில்  மற்ற இலக்கின அமைப்பில் செவ்வாய் பகவானால் பாதிக்கப்படும் ஜாதக அமைப்பை பெற்றவர்கள் , வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று மாலை 4  மணிக்கு பழனி மலைக்கு சென்று பால தண்டாயுதபாணிக்கு பால் அபிஷேகம் செய்து , 6  மணிக்கு மேல் ராஜ அலங்கார தரிசனம் செய்து வரும் அனைவருக்கும் செவ்வாய் பகவானால் வரும் கடுமையான பாதிப்புகள் நிச்சயம் குறையும் , மேலும் போகர் ஜீவ சன்னதியில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது ஜாதகருக்கு , செவ்வாய் பகவான் சகல வளங்களையும் நலன்களையும் நிச்சயம் வாரி வழங்குவார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை . மேலும் எவ்வித செவ்வாய் பாதிப்புகளில் இருந்து ஜாதகரை விரைவில் மீட்டெடுத்து பரிபூரண நல வாழ்க்கையை ஜாதகருக்கு வழங்குகிறது இந்த திருத்தலம் .

எனவே செவ்வாய் பகவானால் தோஷம் என்ற அமைப்பு ஒரு மாயையே, மேலும் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12 ம் பாவகங்களில் அமரும்பொழுது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்வதும் தவறான விஷயமே , இந்த அமைப்பை பெற்ற ஜாதகத்தை கொண்டவர்களுக்கு செவ்வாய் மிகசிறந்த நிர்வாக திறனையே வாரி வழங்குகிறார் என்பதே உண்மை , மேலும் தனது பாவகத்திர்க்கு எட்டில் சர ராசியில் செவ்வாய் அமர்ந்தால் மட்டுமே , ஜாதகர் விபத்தில் சிக்க வேண்டி வருகிறது , அதுவும் சம்பந்த பட்ட எட்டாம் வீட்டின் பலனை , நடப்பு  திசை, புத்தி, அந்தரம் ,சூட்சமம் நடத்தினால் மட்டுமே .

சனிபகவான் தரும் யோக வாழ்க்கை !



ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு பாவகங்களுக்கு , அதிபதியாகும் தன்மை சனி ,குரு,செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களுக்கு உண்டு . இருப்பினும் ஜாதகருக்கு அதிக நன்மையான பலன்களை  தருவதில் முன்னுரிமை சனிபகவானுக்கே உண்டு , கலபுருஷ தத்துவத்திற்கு சனிபகவான் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் வீட்டிற்கும் , அதிர்ஷ்டம் ,லாபம் எனும் பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியாகிறார் , பொதுவாகவே இவருடைய கருணையில்லாமல் , ஒரு ஜாதகருக்கு நல்ல தொழிலும் , அதிர்ஷ்டமும் கிடைத்து விட வாய்ப்பு என்பது இல்லை அது சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு எந்த லக்கினம் என்றாலும் சரி , மேலும் இந்த இரண்டு பாவகங்களில் , சனிபகவான் ஏதாவது ஒரு பாவகத்திர்க்காவது இயற்கையாகவே  நிச்சயம் நன்மையை தருவர் அது எந்த லக்கினம் என்றாலும் சரி,  மகரம் , கும்பம் என்ற ராசி அமைப்பில் இருந்து ஒரு ஜாதகருக்கு தரும் நன்மைகளை பற்றி இனி காண்போம் .

மகர ராசி அமைப்பில் இருந்து சனிபகவான் தரும் யோகங்கள் :

மகர ராசி கால புருஷ தத்துவத்திற்கு சர நில ராசியாகவும் , பத்தாம் வீடாக அமைகிறது . ஒருவரது சுய ஜாதாகத்தில் இந்த மகர ராசி  லக்கினத்திற்கு எந்த பாவகமாக வந்தாலும் சரி , அந்த பாவகத்திர்க்கு சனிபகவான் நன்மை தரும் அமைப்பை பெற்றால் , ஜாதகருக்கு அடிப்படையில் நல்ல திடகாத்திரமான உடல் அமைப்பை கொடுத்துவிடும் , வாழ்க்கையில் ஜாதகருக்கு எந்தவிதமான உடல் நிலை குறைவும் நிச்சயம் ஏற்ப்படாது , அப்படி ஏற்ப்பட்டாலும் ஜாதகர் விரைவில் நலம் பெறுவார் , மேலும் தொழில் அமைப்பில் மண்ணில் இருந்து கிடைக்கும் கனிம வளங்களை அடிப்படை மூலதனமாக கொண்டு விரைவில் , அந்த தொழில் கொடிகட்டி பறக்கும் தொழில் அதிபர்கள் அனைவரின் ஜாதகத்திலும்  இந்த மகர ராசி மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் .

 குறிப்பாக அவர் மேஷ லக்கினம் கடக லக்கினம் , துலா லக்கினம், தனுசு லக்கினம் ,மீன லக்கினம்  போன்ற அமைப்பை நிச்சயம் பெற்றிருப்பார் , மேலும் கட்டுமான  தொழில்களில் , கனரக வாகனம் , சரக்கு வாகனம் ,பண்ணை தொழில் , வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை மொத்த வியாபாரம் செய்வோர்,  இரும்பு , சிமென்ட்,  தொழில்களில் சிறந்து விளங்கும் நபர்கள் , மண்ணை ஆதராமாக கொண்டு தொழில் செய்யும் நபர்களில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்களின் ஜாதக அமைப்பில் இந்த மகர ராசி மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆக ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் மகர ராசி அமைப்பில் நன்மையை செய்கிறார் என்றால் , அந்த ஜாதகருக்கு தொழில் அமைப்பில் இருந்து விரைவான முன்னேற்றமும் , தான் செய்யும் தொழில் சிறந்து விளங்கும் யோகம் நிச்சயம் உண்டு இதை தடுக்க எவராலும் முடியாது .


கும்ப  ராசி அமைப்பில் இருந்து சனிபகவான் தரும் யோகங்கள் :

கும்ப ராசி கால புருஷ தத்துவத்திற்கு ஸ்திர காற்று ராசியாகவும் , பதினொன்றாம் வீடாக அமைகிறது . ஒருவரது சுய ஜாதாகத்தில் இந்த கும்ப ராசி  லக்கினத்திற்கு எந்த பாவகமாக வந்தாலும் சரி , அந்த பாவகத்திர்க்கு சனிபகவான் நன்மை தரும் அமைப்பை பெற்றால் , ஜாதகருக்கு அளவிட முடியாத புத்திசாலி தனத்தையும் , சிறந்த நிர்வாக திறமையையும் வாரி வழங்கி விடுகிறார் , மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் அனைவரும் அரசு துறையில் மிக உயர்ந்த பல பதவிகளில் அமர்ந்து இருக்கின்றனர் , மக்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல்களையும் , அவர்களின் நல்வாழ்விற்க்கான அறிய திட்டங்களை வகுக்கும் பொறுப்புகளில் சிறப்பாக செயல் படுகின்றனர் , அரசு இயந்திரம் சிறப்பாக செயல் பட இவர்களின் அறிவாற்றல் அதிகம் பயன்படுகிறது , சமுதாய முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு வகையில் இவர்களின் உதவி நிச்சயம் தேவைபடுகிறது . தனது அறிவை மூலதனமாக கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அனைவரின் ஜாதகத்திலும்  இந்த கும்ப ராசி மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் .


 குறிப்பாக அவர் ரிஷப லக்கினம் , மிதுன கன்னி லக்கினம் ,சிம்ம லக்கினம் ,விருச்சிக லக்கினம்  போன்ற அமைப்பை நிச்சயம் பெற்றிருப்பார் , தனியார் துறையில் உயர் பதவிகள் வகிப்பதிலும், சட்டம் மற்றும் மருத்துவ துறைகளிலும் ,கலை துறையிலும் , ஆடிட்டர், வங்கி மேலாண்மை ,புதிய கண்டு பிடிப்புகள் , மக்கள் ஆதரவு தொழில்களிலும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் நபர்களும் , இந்த கும்பராசி அமைப்பில் சனிபகவானால் யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை பெற்றவர்களே , அதிலும் தகவல் தொழில் நுட்பம் , மின்னணு சாதனங்கள் மூலம் அதிக லாபம் பெறுவோர்கள் என சிறப்பான வாழ்க்கையை,  இந்த கும்பராசி, சனிபகவானால் பெறுவோர்கள் அதிகம் .

ஆக மகர ராசி அமைப்பில் சனிபகவான் சொத்து , சுகம் , மனம், உடல் என்ற அமைப்பில் யோக பலன்களையும் , கும்ப ராசி அமைப்பில் சனிபகவான் அறிவு , புத்திசாலி தனம் , அதிர்ஷ்டம் , மக்கள் செல்வாக்கு  என்ற அமைப்பில் யோக பலன்களையும் , தவறாமல் தந்து விடுகிறார் . எந்த ஒரு லக்கினம் என்றாலும் சனிபகவான் அதிபதியாக வரும் இந்த மகரம் , கும்பம் ராசி அமைப்பில் இருந்து ஒரு ராசி , அமைப்பிற்கு நிச்சயம் சனிபகவான் நன்மையான பலன்களை தந்து விடுகிறார் , எனவே எந்த ஒரு ஜாதகரும் சனிபகவானால் 100 சதவிகிதம் பாதிக்க படுவதில்லை என்பது முற்றிலும் உண்மை.

ராஜயோகம் அளிக்கும் ராகு

ராஜயோகம் அளிக்கும் ராகு
அவன் பெரிய வைரக்கியகாரன் அவன் நினைத்ததை செய்து முடிப்பான் என்று சொல்ல கேட்டு இருக்கிறௌம். அவர்கள் எல்லாம் ராகுவின் வலிமையான ஆதிக்கம் பெற்றவர்கள் ஆவார்கள். உலகம் முழுவதும் சுற்றி உயர் புகழ் பெறவும் பலவித மொழியினாலும் பாராட்டப்படவும் அதிகாரத்துடன் கூடிய அந்தஸ்து இவற்றை அடையவும் பொருள் வளத்தில் செழிப்படையும் அனைத்துலகிலும் ராஜயோகத்தை அளிப்பவர் ராகு.
ராகு யார்?
மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் பாற்கடலில் அமிர்தத்தைக் கடைய வேண்டும் அப்படிக் கடைய மந்திரம் மலையை மத்தாக உபயோகிக்க வேண்டும். தேவ பலத்தினால் மட்டும் அமிர்தத்தை எடுக்க முடியாது. அசுரபலம் தேவை என்று திருமால் மகாவிஷ்ணு தேவேந்திரனுக்கு யோசனை கூறினார். உடனே ஆதிசேஷன் மந்திர மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டுவந்தான். சந்திரன் தூணாக இருந்தான். வாசுகி எனும் பாம்பு நானாக (கயிராக) உதவியது. மலையைக் கடைய ஆரம்பித்தார்கள். அமிர்தத்தைக் கடைய முற்பட்டபொழுது ஏற்பட்ட வலி தாங்காமல் வாசுகி விஷத்தைக் கக்க அனைவரும் பயந்து பரமசிவனிடம் முறையிட்டு சரணடைந்தார்.கள். பரமசிவனார். ஆலகால விஷத்தைத் தானே உண்டு நீலகண்டனாக மாறினார்.. மீண்டும் பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தார்கள். அதில் திருமகள் ஐராவதம் காமதேனு என்று பல அரிய பொருள்கள் பாற்கடலிலிருந்து வெளியே வந்தன. கடைசியில் அமுதம் பெருக்கெடுத்தது. அமிர்தம் கிடைத்ததும்; ஒரு பிரச்சனை ஏற்பட்டது தீயவர்களான அசுரர்கள் அமுத்ததை உண்டால் அவர்கள் சிரஞ்சீவியாகி விடுவார்கள் உலகத்தில் அவர்களால் ஏற்படும் துன்பத்திற்கு விடிவே கிடையாது என்று மோகினிப் பெண் உருவவெடுத்து மகாவிஷ்ணு அமிர்தத்தை தானே பங்கிடுவதாகவும் தேவர்கள் ஒரு புறமும். அசுரர்கள் இனனொரு புறமும் என்று இருபுறமாக அமரும்படி கேட்டுக்கொண்டாள். தேவர்கள் அனைவரும் திருமாலே மோகினி என்று கண்டு கொண்டார்கள் ஆனால் அசுரர்கள் மோகினியின் அவய அழகுகளில் பார்வையைப் பதித்து சண்பக மலரும் செம்பொன்னும் இணைந்த தேகம் முகிலையொத்த குழல் மூன்றாம் பிறையை ஒத்த நெற்றி மானின் கண்கள் எள் போன்ற நாசி மலையை நிகர்த்த முலைகள் ஈட்டி போன்ற முலையின் காம்பு பிடியில் அடங்கும் இடை ஆமையையொத்த புறவடிவு வாழையயொத்த தொடைகள் பந்து போன்ற குதிகால் தாமரை மலர்போன்ற பாதங்கள் எந்த எந்த அவயவங்களைப் பார்த்தார்களோ அந்தந்த அவயவங்களில் மோகித்து தம்மை மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் காஸ்யபரின் மகள் ஸிம்ஹிகைக்கும் விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பிறந்த மகன் சுவாணபானு அமிர்தம் கடைந்தெடுப்பதில் தேவர்கள் அசுரர்கள் இருவரின் பங்கு இருந்தன. ஆனால் அதனைப் பங்கிடுவதில் தேவர்களுக்கு அதிகமாகவும் அசுரர்களுக்கு வெறும் கரண்டியைக் காட்டியும் ஸ்ரீமகாவிஷ்ணுவான மோகினி பாரபட்சம் பண்ணுவதைக் கண்டான். உடனே சட்டென்று அவனும் தேவர்கள் பக்கம் சென்று தேவவடிவில் அமர்ந்து விட்டான். அமிர்தம் பரிமாறப்பட்டாகி விட்டது. அவன் அதை நக்கி அசிங்கமாகச் சாப்பிடுவதைக் கண்ட சூரிய சந்திரர்கள் பார்த்தனர். மோகினியான மகாவிஷ்ணுவிடம் சாடை காட்டித் தெரிவித்தும் விட்டனர். உண்மையை உணர்ந்து கொண்ட மோகினியாக இருக்கும் ஸ்ரீமகா விஷ்ணு பரிமாறிய கரண்டியாலேயே சுவர்ணபானுவின் தலையில் ஓங்கி அடித்தார் சுவர்ணபானுவின் தலை துண்டிக்கப்பட்டுவிட்டது. அமிர்தம் உண்டதால் சுவர்ணபானு இறக்கவில்லை. மாறாக வெட்டபட்ட தலை அப்படியே இருக்க அதிலிருந்து உடல் கருநாகமாக வளர்ந்து ஒரு புதிய உருவாக மாறியது. இதுவே ராகுதேவன் வெட்டப்பட்ட உடலுடன் ஐந்து தலைநாகம் வடிவில் தலை வளர்ந்தது அது கேது எனப்பட்டது. அமிர்தம் பருகியதால் உயிர்பெற்று பரமனை நோக்கித் தவம் செய்து கிரக பதவி பெற்றதினால் ராகு கேது இவ்விருவரும் பன்னிரு ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கி வருகிறார்கள். மற்ற ஏழு கிரகங்களும் ராசி சக்கரத்தில் வலமாகச் சுற்றி வருகையில் ராகுவும் கேதுவும் அவர்களுக்கு எதிரி திசையில் இடமாக எப்பொழுதும் எதிரெதிராக 180 டிகிரியிலேயே சுற்றிவருவர். ஆண் பெண் இனப்பிரிவில் அலியாவான் ராகு குணங்களில் தாமஸகுணத்தோன். தென் மேற்குத் திசைக்குரியயோன். பஞ்ச பூதங்களில் வானம் இவன். ராகு பகவான் நவக்கிரஹ பீடத்தில் சூரியனுக்கு வடமேற்கே அமர்ந்திருப்பதால் உயரமான தோற்றம் உடையவர். ஆட்டுக்கடா வாகனமுடையவார் எட்டுக்குதிரைகள் பூட்டிய தேரிலும் இருப்பவர். நான்கு கைகள் உடையவர் கறுப்பு வண்ணம் இவருக்கு பிடித்தமானது.
ஜாதகங்களில் ராகு
பூமியிலிருந்து சுமார் 9 கோடி மைல் தூரம் உள்ள இந்த ராகு கிரகம். சூரியனுக்கு 13 000 விஸ்தார யோசனையுள்ள மண்டலத்தில் உள்ளது. சூரியனை ஒரு முறை அபிரதஷிணமாக சுற்றிவவர பதினெட்டரை வருடங்கள் ஆகும். புராணத்தில் கரும்பாம்பு என்று அழைக்கப்படும் ராகு கிரகம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எட்டாவது கிரகம் இதை சாயா கிரகம் என்று கூறுவார்கள் நிழல் கிரகம் என்றும் கூறுவார்கள். சாயா என்றால் நிழல் என்று பொருள். அவர்கென எந்த ராசியிலும் ஆதிபத்தியமில்லை. எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுவே அவரது சொந்த வீடாகும். எந்த ராசியில் இருக்கிறாரோ எந்த கிரகத்தினால் பார்க்கப்படுகிறாரோ எந்த இடத்தில் சோக்கைபெற்றுள்ளாரோ அந்த இடத்தின் பலனை முழுமையாகத்தருவார் ஒருசில ஜோதிட சாஸ்திர நுல்கள் மட்டும் விருச்சிகம் இவருக்கு உச்சவீடு என்றும் ரிஷபம் நீச வீடு என்றும் கன்னி இவனுக்குச் சொந்த வீடு என்றும் குறிப்பிடுகிறது. ஒரு ராசியில் 1.5 வருடம் சஞ்சாரம் செய்யும் ராகு திருவாதிரை சுவாதி சதயம் நட்சத்திரங்களுக்கு அதிபதி. ஆங்கில எண்ணில் 4ம் எண்ணுக்கு அதிபதியாவார். 4 13 22 தேதிகளில் பிறந்தவர்கள் ராகு ஆதிக்கம் உடையவர்கள். நவக்கிரகங்களில் மிகவும் பலம் வாய்ந்தவர் சனியை விட செவ்வாயும் செவ்வாயை விட புதனும் புதனை விட குருவும் குருவை விட சுக்கிரனும். சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் இவர்கள் அனைவரை விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகிறார்கள். சந்திர சூரியர்களையே பழமிழக்கும் படி செய்யவும் ஒளி குன்றும்படி செய்யவும் கட்டுப்படுத்தவும் ஆற்றல் உள்ளவர் ராகு யோகத்திற்கு அதிபதி வீரிய பாம்பைப்பற்றி விளங்கச் சொல்லுவாய் யோகந்தன்னை என்ற படி யோக யோகத்தைத் தருபவர் ஒருவர் ஜாதகத்தில் ராகு நல்ல இடத்தில் இருந்தால் நல்லவர் சோக்கை மற்றும் சுபகிரக பார் வை இருந்தால் ராகு அந்த ஜாதகனைசீமானாகவும் அரசர்க்கு ஒப்பானவராகவும் வாழச் செய்வார் அதனால் தான்
“ராகுவைப் போல் கொடுப்பாரில்லை” என்று சொல்லுப்படுகிறது. அரசாங்கத்தில் பதவி-புகழ் இவற்றைப் பெறுவதற்கும் அதிகார அற்றலை அடைவதற்கும் உலகியல் விஷயங்களில் அறிவைத் தருவதற்கும் உள்ளத்தில் தௌவை தருவதற்கும் அனைத்துலகிலும் பயணம் செய்வதற்கும் ராகு பலம் வேண்டும். தந்தை வழி பாட்டனாருடைய சொத்துகள் எல்லாம் அனுபவிப்பதற்கும் கூட ராகுவின் பலம் வேண்டும். மேலும் பலம் பெற்ற ராகு ஓர் ஆண் மகனுக்குப் பெண்கள் மூலம் சுகத்தையும் செல்வத்தையும் சோர்த்து வைப்பான் ஸ்பெகுலேஷன் துறை மூலம் ஒருவனைக் கோடீஸ்வரனாக்குவான் ராகு. அன்னியமொழி பேசுபவர்கள் மூலம் அதிகம் லாபங்களை கொடுப்பவர் ராகுபகவான் ஆகும். கெட்ட வழிகளில் கூட ஒருவனை பொருளாதாரத்தில் உயர்த்துவதில் ராகுவிற்கு நிகர் ராகுவேதான். சூதாட்டம் போன்ற வகைகளில் பணம் சம்பாதிப்பது பொய் சொல்லி ஏமாற்றுதல் அரசாங்கத்திற்கு எதிரான செயல்கள் செய்து பணம் ஈட்டுவது (கள்ளக்கடத்தல் கள்ள நோட்டு அச்சிடுவது) போன்றவை ஆகும். சுபபலம் பெற்ற சனி ஒருவருக்கு எந்த அளவுக்கு உயர்வைத் தருவானோ அந்த அளவுக்கு உயர்வைத் தருவான் ராகு.
ராகு சரியில்லாத ஜாதகங்கள்
சந்திர சூரியர்களையே பலமிழக்கும் படி செய்யவும் ஒளி குன்றும் படி செய்யவும் கட்டுப்படுத்தவும் ஆற்றல் உள்ள ராகு கிரகத்திற்கு மிகப்பொய பகை கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ஆகும். ராசியில் ராகு கேதுவிற்கு சூரிய சந்திரர்கள் நின்ற ராசியும் ராசி அதிபதியும் பகைவர்கள். ராசியில் சூரிய சந்திரனுடன் ராகு கேது சோர்க்கை பெற்ற ஜாதகருக்கு இவர்கள் (ராகு கேது) இன்னல்களைத் தருகிறார்கள்.
மேலும் 2. 7. 8 இடங்களில் இருப்பதும் பாவக்கிரகங்களுடன் சோந்து இருப்பதும் பாவக்கிரங்களால் பார்க்கப்படுவதும் நீசக்கிரகத்துடன் சோந்து இருப்பதும் அந்த ஜாதகருக்குத் துன்பங்களை உண்டாக்கும். மேலும் ஜாதகத்தில் 5ம் இடத்தல் இருந்தால் புத்திரதோஷமும் 8ம்; இடத்தில் இருந்தால் மாங்கல்யதோஷமும் 7ம் இடத்தில் இருந்தால் திருமணத்தடை சர்பதோஷம் என்றும் எல்லா கிரகங்களும் ராகு கேது பிடிக்குள் அகப்பட்டு இருந்தால் கால சர்ப்ப தோஷம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகுதோஷம் பெற்ற ஜாதகர்களுக்கு கடன் தொல்லை அதிகமாகும் தீய பெண்களுடன் நட்பு ஏற்பட்டு துன்பமடைவது சாராயம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் அவமானப்படுவது அதிக கஷ்டப்படுவது தற்கொலைச் செய்து கொள்ளக்கூடிய மனோபாலம் ஏற்படுவது கனவில் நோல் விஷப்பாம்புகளைப் பார்ப்பது பாம்புகளால் கடிக்கப்பட்டு துன்பத்தை அடைவது. கை கால்களில் சங்கிலி கட்டப்படும் வாய்ப்பு ஏற்படுவது பேய் பிசாசுகளால் தொல்லைகள் செய்வினைக்கோளாறு உண்டாவது. சாபங்களுக்கு ஆளாவது. மாந்தீரிக தொழிலில் ஈடுபடுவது. தீயபெண்களிடம் தொடர்பு விதவை பெண்களிடம் தொடர்பு அவர்களால் துன்பம் ஏற்படுவது விபச்சார பெண்களுடன் பழகி அவர்கள் வீட்டிலேயே காலத்தை கழிப்பது செக்ஸ் முறையில் அதிகமான காமபோதைக்கு ஆட்பட்டு பெண்களை கடிப்பது அவர்களின் பிறப்பு உறுப்புகளை எல்லாம் சுவைப்பது பெண் வியாதிகளால் அதிகமான துன்பம் அடைவது பெண்மோகம் கொண்டு பித்தனாக அலைவது. தன்னுடைய தேசத்தை விட்டு ஓடிப்போய் விடக்கூடிய வாய்ப்பு உருது பேசக்கூடிய நாடுகளுக்குப் போகும் சந்தர்ப்பம் ஏற்படும் பணம் கொடுத்தும் அந்த நாட்டிற்குப்போக முடியாமல் தவிப்பது நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் அகாலமரணம் அடைவது தூக்குப் போட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இந்த ஜாதகருக்குக் கட்டாயம் ஏற்படுவது தன் தகுதிக்கு இனத்திற்கு சம்மந்தமில்லாத தொழில் செய்து நஷ்டமடைவது கஷ்டஜீவனம் கடன்தொல்லை உற்ற நண்பர்களால் தொல்லை அறுவை சிகிச்சை சிறை வாசபயம் ஏற்படுவது வருமான வாகளின் மூலம் துன்பங்கள் ஏற்படுவது காவல் துறையினரால் அவமானம் ஏற்படுவது விஷபயம் அங்கஹீனம் வாயுவலிப்பு நோய் பித்தநோய் மறைமுக உறுப்புகளில் நோய்கள் குஷ்டம் போன்ற கொடூர நோய்கள் (எய்ட்ஸ்) கண்டங்கள் ஏற்படல் குடல் சம்மந்தமான நோய் கட்டிகள் குடல்புண் மண்ணீரல் சம்பந்தமான நோய் பரதேச வாசம் ஜலகண்டம் தெருவில் வெட்டி பேச்சு அசிங்கமான பேச்சு நீண்டநாள் திருமணத்தடை புத்திரதடை தொழில் வளர்ச்சி தடை இவை அனைத்திற்கும் ராகு சரியில்லாதே காரணமாகும்.
ராகுவின் ஆற்றல் பெற
காளஹஸ்தி நாகைக்காரோணம் திருக்களர் இராமேஸ்வரம் திருநாகேஸ்வரம் திருப்பாம்புரம் பேரையூர்; திருச்செங்கொடு நாகர்கோவில் நாகநாதர் ஆலயம் திருவேற்காடு சிதம்பரம்தில்லைகாளி போன்ற தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.
ஸ்ரீகாளஹஸ்தி: இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை. மற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்பட்டுவிடும். இக்கோயிலின் செல்லும் அமைப்பே ராகு கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது. மேலும் ராகு கேது தோஷ நிவர்த்திக்காக எல்லாக் கிழமைகளிலும் அதிலும் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. ராகுவினால் ஏற்படும் தோஷம் விலக தக்க பரிகாரம் செய்தால் அவர் அருள்கிட்டும்.
திருநாகேஸ்வரம்: சுகில முனிவரின் மகனை தஷகன் என்ற பாம்பு தீண்டியதால் “நீ மானுட சர்ப்பமாகக் கடவாய்” என்று சபித்தார். தஷகன் முனிவரிடம் சாப விமோசனம் கோரினான். “பூலோகத்தில் மானுடப் பாம்பாகப் பிறந்து பல ஆலயங்களுக்குச் சென்று வா கடைசியில் விமோசனம் கிடைக்கும்” என்றார். தஷகன் மானுட சர்ப்பமாகப் பிறந்து பல ஆலயங்களுக்கு சென்று இறைவனை பூஜித்தான். கடைசியில் ஒரு மாசி சிவராத்திரியன்று முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரையும் இரண்டாம் ஜாமத்தில் சண்பகாரண்யத்தில் (திருநாகேஸ்வரம்) சுயம்புவாக விளங்கும் நாகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் சேஷபுரி என்கிற திருப்பாம்புரத்தில் உள்ள ஸ்வாமியையம் நான்காம் ஜாமத்தில் நாகப்பட்டனத்தில் உள்ள ஸ்வாமியையும் வழிபட்டு சாப நிவர்த்தி கேட்டான். இறைவன் அவனை மீண்டும் “திருநாகேஸ்வரம் வருவாயாக” என்று அழைத்தார். திருநாகேஸ்வரத்தை அடைந்து சாபவிமோசனம் பெற்றான் தஷகன். பொழுது விடிந்து விட்டதால் ஸ்வாமி தஷகனை அங்கேயே தங்கி விடுமாறு கூறினார். தஷகனின் வேண்டுகோளின்படி இறைவன் அன்றுமுதல் திருநாகேஸ்வரர் ஆனார். ஊர் பெயரும் திருநாகேஸ்வரம் ஆயிற்று. சாபம் இங்கு நீங்கியதால்”ராகுதோஷமும் நாகதோஷமும் உடையவர்கள் என்னைத் தேடி வந்து அபிஷேக ஆராதனைகள் செய்தால் நான் அவர்களின் குறையைத் தீர்த்து வைக்கிறேன்”என்று சத்தியம் செய்தார். இங்கு ராகு பகவான் இரு தேவிகளான நாகவள்ளி நாககன்னி சகிதம் எழுந்தருளி இருக்கிறார்;. இத்தலத்தில் வழிப்பட்டால் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.
இராமேஸ்வரம்: திருக்களர் இராமேஸ்வரம் போன்ற தலங்களிலும் ராகு ஈசனை வழிபட்டுள்ளது இங்கு சென்று முதலில் தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராமபிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும்.
திருப்பாம்புரம்: அதிகமான ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.
நாகர்கோவில்:இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விஷேசமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் நடக்கும்.
திருச்செங்கோடு: ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் உள்ள கோவில். இங்குள்ள நாகர் உருவச்சிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.
பேரையூர்:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் இக்கோவில் வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது. கோயில் மதில் சுவர் முதல் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கள் விக்ரங்கள் உள்ளன. மேலும் ராகுவின் அதிதேவதை துர்க்கை காளி கருமாரி போன்ற தெங்வங்களை வழிபட்டாலும் ராகுவின் அருள் பெறலாம் திருவேற்காடு சென்னையில் திருவேற்காடு கருமாரியம்மன் வழிபாடு செய்தால் ராகுவின் அருள் பெறலாம்.
ஸ்ரீஅஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி: புதுக்கோட்டையில் உள்ள புவநேச்வரி அவதூத வித்யா பீடத்தில் எழுந்தருளியுள்ள துர்க்காதேவியை வழிபட்டால் ராகுவின் அருள் பெறலாம். ஜாதகத்தில் ராகு சுக்ரன் இணைந்தவர்கள் ஸ்ரீ அஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்க்காதேவியை வழிபட்டால் சிறப்பான பலன்கள் அடையலாம்.
ஸ்ரீஅரியநாச்சியம்மன்: சிவனும் சக்தியும் நின்றகோலம் திருச்செங்கோடு சிவனும் சக்தியும் அமர்ந்த நிலையில் உள்ள இடம் உலகிலேயே அரியநாச்சியம்மன் மட்டும்தான் ஜாதகத்தில் ராகு செவ்வாய் இணைந்தவர்கள் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை காணலாம்.
காளிவழிபாடு: மேலும் சிதம்பரம் தில்லைகாளி உறையூர் வெக்காளி சிவகங்கை வெட்டுடையகாளி மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.
பஞ்சமிதிதி: நாகங்களுக்கு மிகவும் புனிதமான திதி இது இந்த நாளில் தான் நாகலோகத்தை பிரம்மா படைத்தார். பஞ்சமிதிதியில் விரதம் இருந்து நாக தேவதைகளை வணங்கினால் நாகதோஷம் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெலாம். புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போய் வழிபாடு செய்தாலும் ராகு அருள் பெறலாம்.
கோமேதகம்: ராகுபகவானுக்கு விஷேசமான ரத்தினமாகும். இதை மருந்தாக்கி சாப்பிட நல்ல ஜீரண சக்தி உண்டாகும். உடலில் நல்ல பளபளப்பு உண்டாகும். நரம்பு தசை மூட்டுப்பிடிப்பு போன்ற வியாதிகளிலிருந்து குணம் கிடைக்கும். இதை வெள்ளியில் செய்து அணிந்து கொள்வது நல்லது.
நாகலிங்கபூ மந்தாரை மலர்கள் கொண்டு இறைவனை பூஜை செய்வதாலும் அபிஷேகத்தில் பாலில் அபிஷேகம் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்வதாலும் நேவேத்தியத்தில் பொரி தயிர்ஏடு அவியல் வகைகளை நேவேத்தியம் செய்வதாலும் உளுந்து பொருட்களில் செய்யப்பட்ட வடை புளியோதரை போன்ற உணவு வகைகளை நேவேத்தியம் செய்து உண்பதாலும் சிறுநாகப்பூ மரம் நாகலிங்கம் மரம் போன்ற மரங்களை நடுவதாலும் சிறுநாகப்பூ மரம் நாகலிங்கமரம் கருங்காலிமரம் செங்கருங்காலி மரம் மருதமரம் கடம்புமரம் போன்றவற்றிக்கு தண்ணீர் ஊற்றி வணங்கிவருவதாலும். ஆடை வகைகளில் நீலம் கருப்பு கருநீலம் கருப்பு கோடுகள் நீலநிற கோடுகள் போன்ற ஆடைகளை அணிவதாலும் ராகுவின் அருள் பெறலாம். ராகுவின் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி தென்மேற்கு திசைகளில் வசிக்கலாம்-வீடுகள் கட்டலாம். ராகுதோஷம் நீங்க “அரிம் ஸ்ரீம் நசிமசி” மந்திரம் ஜெபித்தால் ராகுதோஷம் நீங்கும்-மேலும் ராகுவின் காயத்ரி மந்திரமான நகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி ! தந்தோ ராஹீ ப்ரசோதயாத்! மந்திரத்தை தினமும் 18 தடவை சொல்லாம். ராகுதிசை ராகுபுத்தி நடப்பவர்கள் தினமும் சொன்னால் சிறப்பான பலன்களை அடையலாம். மேலும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதிஷேசன் மேல்படுத்து இருக்கும் அரங்கநாதருக்கு எதிரில் உள்ள உடல் முழுவதும் நாகங்களை அணிகலன்களாக அணிந்திருக்கும் கருடாழ்வாரையூம் சக்கரத்தாழ்வாருக்கு செல்லும் வழியில் ஒரு கையில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக அணிந்து இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாரையும் வணங்கி வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கும் மேலும் பறக்கும்; பறவைகள் மயில் கருடன் போன்ற பறவைகளுக்கு உணவு இடுதல் ராகு தோஷம் நீங்கும் மேலும் நம்முடைய வலது கையில் நடுவிரல் (பாம்புவிரல்) சிறிது ரத்தம் (ஒரு புள்ளி ரத்தம்) எடுத்து பால் முட்டை ஏதாவது ஒன்றில் கலந்து பாம்பு இருக்கும் புற்றில் வைத்து வணங்கி வந்தால் ராகு தோஷம் நீங்கும் (இது கேரளாவில் மாந்திரிக முறையில் தோஷம் கழிக்கும் முறை) கேரளாவில் உள்ள மக்கள் இதுமாதிரி அதிகம் பேர்கள் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பதினெட்டு சித்தர்களில் புலிப்பாணி சித்தர் நாகதோஷ பரிகாரம் நீங்க 300 வழிமுறைகள் கூறியுள்ளார். மேலும் புலிப்பாணிசித்தரின் குருவான போகர் சித்தர் வைத்திய நுல்களிலும் ராகுதோஷம் நீங்க வைத்திய முறையில் 47 வகை வழிமுறைகள் கூறியுள்ளார்;. மேலும் பழைய ஜாதக பாரிஜாதம் பலதீபிகை பிருகத் ஜாதகம் பராசர ஹோரை பஞ்ச சித்தாந்தம் நந்தி வாக்கியம் சுகப்பிர்ம்ரிஷி வாக்கியம் நவக்கிரகத்ர்க்கம் சிகாமணிகள் சிந்தாமணிகள் போன்ற பழம்பெரும் நுல்கள் பின்னால் எழுந்த நாரதீயம் ஜாதக (தமிழ்) பாரிஜாதம் ஜாதக சந்திரிகை எனும் நுல்கள் மகாகவி காளிதாஸ் எழுதிய காண்டம் போன்ற அனைத்து நுல்களிலும் பலமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.
ஒருவன் பல குரல்களில் (விகடகவி) பேசும் திறன் பல்லாண்டுவரை நீடித்த அரசியலில் நீணடகாலம் இருக்க (தலைவர்கள்) கலைத்துறையில் விதவிதமான வேஷங்கள் (நடிகர்கள்) செய்வதற்கும் (ராகுவிற்கு வேஷகாரன் என்ற சிறப்பு பெயரும் உண்டு) ராகுவின் அருள் வேண்டும். ராகுவைப் போல் கொடுப்பாரில்லை. என்று சொல்லக்கூடிய அந்த ராஜ யோகத்தை வழங்க கூடிய ராகுவை வணங்கி அருள் பெருவோம். வாழ்க வையகம!; வாழ்க வளமுடன்

செவ்வாய் 1 ல் இருந்தால்

செவ்வாய் 1 ல் இருந்தால் தலையில் அடிபடும். செவ்வாய் ஒன்றாம் வீட்டில் இருந்து 7 ம் பார்வையாக 7 ம் வீட்டை பார்ப்பதால் திருமண வாழ்வில்

சங்கடங்கள் ஏற்படும். செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் மூர்க்கதனமாக கோபம் வரும். தாயாருக்கு தீங்கு விளைவிக்கும். கோபம் அதிகரிக்கும்.

இளம்தோற்றமாக காணப்படும். உடம்பில் உஷ்ணம் காரணமாக கட்டி ஏற்படும். நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள். தலையில் அடிப்படும்.

ஏதாவது விதத்தில் தலையில் அடிப்படும். செவ்வாய் தசையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாக்கு சொந்த வீடாக அல்லது உச்ச வீடாக

இருந்தால் நல்லது நடக்கும்.

செவ்வாய் 2 ம் வீட்டில் இருந்தால் வாக்கில் கடுமை இருக்கும். பேச்சில் சண்டை வரும். செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ உச்சவீடாக

இல்லாவிட்டால் அவர் சொல்லே அவருக்கு விரோதமாக ஆகும். கையில் காசு தங்காது. செவ்வாய் இரண்டில் இருப்பதால் குடும்பத்தில் சண்டை

சச்சரவுகள். கண்ணில் தொந்தரவு இருக்கும். செவ்வாய் பலம் பெற்று இருந்தால் நல்லது நடக்கும். செவ்வாய் இரண்டில் இருப்பதால் தோஷம்

ஏற்படும்.

செவ்வாய் 3 ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். காதில் தொந்தரவு இருக்கும். செல்வம் நிறைய கிடைக்கும். நல்ல அறிவாற்றல்

கிடைக்கும். உடம்பு நல்ல உறுதியாக இருக்கும். இளைய சகோதரருக்கு கெடுதல் செய்யும். சிலபேருக்கு இளைய சகோதர,சகோதரிகள் இருக்க

மாட்டார்கள். 3 ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய்நலம் கெடும்.

செவ்வாய் 4 ம் வீட்டில் இருந்தால் தாய்வீட்டின் சொத்து கிடைக்கும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவு

இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். 4 ஆம் வீட்டு செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு குறையும். மார்பில் வலி ஏற்படும்.

செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். புத்தி மங்கும். குழந்தைகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வயிற்றுவலி ஏற்படும்.

எதிரிகளால் தொல்லை வரும். பணவரவு இருக்காது. 5 ஆம் வீடு செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ அல்லது உச்சவீடாகவோ இருந்தால் தடைகள்

அனைத்தும் அகலும். 5 ஆம் வீடு நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று காட்டும் இடம் ஆகையால் செவ்வாய் 5-ல் இருந்தால்

சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.

செவ்வாய் 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றிகொள்ளும் தைரியும் இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். செவ்வாய் காமம் அதிகமாக

இருக்கும். தாய்மாமனுக்கு தொல்லை தருவார். நல்ல செரிக்கும். இரத்தம் மாசுபடும் அதனால் உடலில் கட்டி ஏற்படும். நல்ல கற்றவர்களிடம்

தொடர்பு ஏற்படும். புகழ் ஏற்படும். 6 ஆம் வீட்டு செவ்வாயினால் பெரும் பொருட்செலவு ஏற்படும்
ஜோதிட சாஸ்திரம் என்பது இந்துக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துவிட்ட ஒரு அம்சமாகும். அன்றாடம் நாள், நட்சத்திரம், திதி, ராகு காலம், எமகண்டம், சுபஹோரைகள் பார்ப்பதில் ஆரம்பித்து, எதை செய்ய வேண்டும் என்றாலும் ஜாதக கிரக நிலைகள் பார்ப்பது வரை கடைபிடிக்கப்படுகிறது. கிரக யோகங்கள் பெறவும், தோஷ, தடைகள், பீடைகளில் இருந்து விடுபடவும் விரதங்கள், ஹோமங்கள், வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள், கிரக பரிகார பூஜைகள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. முறையாக இவற்றை செய்வதன் மூலம் தடைகள், தாக்கங்கள் குறைவதுடன், உடலும், உள்ளமும் தூய்மையாகி அமைதியும், சந்தோஷமும் கிடைக்கும். தோஷ நிவர்த்திக்கும், யோக பலன் உண்டாவதற்கும் நவக்கிரக வழிபாடு மிகவும் அவசியமாகும்.

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவராவார். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று.. காசு, பணம் எனப்படும் பொருட்செல்வம். இன்னொன்று.. குழந்தைச் செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திர ஸ்தானங்களின் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும். ‘குரு இருக்கும் இடம் பாழ்.

பார்க்கும் இடம் விருத்தி’ என்பார்கள். அதன்படி, இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும். குருவுக்கு பல்வேறு ஆதிக்கம் உள்ளது. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி ஆகியவை குருவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.
சமூக அந்தஸ்து, அரசியல் பதவி, ஆன்மிக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், தர்ம ஸ்தாபனங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரி கட்டுதல், அறங்காவலர் பதவி, நீதிபதி, கவர்னர் போன்ற அரசு உயர் பதவியில் அமர்வதற்கு குருபகவானின் அருள்கடாட்சம் தேவை.

வழிபாடு - பரிகாரம்


குரு பகவானின் அருள் பார்வை கிடைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குரு பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். குரு திசை நடப்பவர்கள், திருமண, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் தினமும் ‘ஓம்பிம சிவய வசி குரு தேவாய நம’ என்று 108 முறை சொல்லி வரலாம். கோசார குரு சரியில்லாமல் இருப்பது, அதாவது ஜென்ம குரு, அஷ்டம குரு, விரய குரு உள்ளவர்கள் தினமும்

‘ஓம் குரு தேவாய வித்மஹே பிரம்மானந்தாய தீமஹி தந்நோ குரு பிரசோதயாத்’

என்ற காயத்ரி மந்திரத்தை 54 முறை சொல்லி வரலாம். நாளை (26-ம் தேதி) குருபகவான் ஜெயந்தியாகும். இந்நாளில் குருபகவானை வணங்கி அவரது அருள் கடாட்சம் பெறுவோமாக.

குருவின் அம்சங்கள்

கிழமை:    வியாழன்
தேதிகள்:    3, 12, 21, 30
நட்சத்திரங்கள்:    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நிறம்:    மஞ்சள்
ரத்தினம்:    கனக புஷ்பராகம்
தானியம்:    கொண்டைக் கடலை
உலோகம்:    பொன் (தங்கம்)
ஆடை:    தூய மஞ்சள்
ராசி:    தனுசு - மீனம்
உச்ச ராசி:    கடகம்
நீச்ச ராசி:    மகரம்

சனீஸ்வர பகவானை

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.

சாக்கடையில் பதுங்கிய இந்திரன்

ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம் சொன்னார். ‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார். சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.

சனீஸ்வரரின் அதிகாரம்

எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார். நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், ‘சனியனே! உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது’ என்று சொல்லி திட்டுவார்கள்.

உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது. கேது ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். தற்போது 2012-ம் ஆண்டு முதல் சனி தன் உச்ச வீடான துலா ராசியில் அமர்ந்துள்ளார். ஆகையால் பூரண பலத்துடன் திகழ்கிறார்.

இதனால் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த உச்ச சனியால் சகல யோக அதிர்ஷ்டங்கள், சுப விசேஷங்கள் கூடிவரும். யோக பாக்யத்தை அருள்வார். மற்ற ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள், நிறை, குறைகள், கஷ்ட-நஷ்டங்கள் இருந்தாலும் உச்ச பலம் காரணமாக சில சாதகமான பலன்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி திசை நடப்பவர்களுக்கு இந்த உச்ச நேரம் மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும்.

வழிபாடு பரிகாரம்

பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். நவ திருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கி தரலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.

"பாவங்களில் , கிரகங்களும் , ஜாதகரின் நிலையும்

"கல்வி தரும் கலைமகள்-"--
"வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறும்  பாவலன் உள்ளத் திருப்பாள் " ---- மகாகவி பாரதியார்

அன்பார்ந்த வலைதள பார்வையாளர்களே ! கல்வியாளர்களே அனைவருக்கும் கல்வி,கலைகளுக்கு அதிபதியான கலைமகள் ஸ்ரீ சரஸ்வதி தேவியின் ஸ்ரீ பாத கமலம் பணிந்து ,' கல்வியை பற்றி ஆய்வது தானே சிறப்பு எனவே கல்வி நிலையை பற்றி ஆய்வோமா ?

மேதைகளையும் ,கணிதவல்லுனர்களையும் ,தர்க்கவாதிகளையும் ,பேச்சாளர்களையும் ,மருத்துவர்களையும் ,பொறியாளர்களையும் ,ஜோதிடர்களையும் ,நடனம்,நாடகம்,நாட்டிய கலைஞர்களையும் உருவாக்கிடும் மூலகர்த்தா வித்யா காரகன் புதனே யாவார்

"பாவங்களில் , கிரகங்களும் , ஜாதகரின் நிலையும் :"-
லக்னத்தில் - சந்திரன் இருக்க ஜாதகர் பக்தி , ஞானம் , ஆசாரமுடையவராகவும்
- புதன் இருக்க இனியவாக்கும் , சாத்திர மறிந்தவராகவும்,
- குரு இருக்க புத்தி கூர்மை , அறிஞன் , பண்டிதனாகவும்
- சனி இருக்க நினைவாற்றல் அற்றவராகவும் இருப்பர் .

இரண்டாமிடத்தில் சந்திரன் இருக்க நல்ல படிப்பும் ,
- புதன் இருக்க நல்வாக்கு கல்வியுடையவனாகவும் ,
- குரு இருக்க அறிவு கூர்மை யுடையவனாகவும் இருப்பர்.

மூன்றாமிடத்தில் புதன் இருக்க சிறந்த அறிவுள்ளவனாகவும்
- குரு இருக்க கூர்மதியுடையவனாகவும்
- சனி இருக்க கல்வியிற் தடை , படிப்பில் மந்தகதி உடையவனாகவும் , சனிபலம் பெற - ஞானம் உண்டு .
- கேது இருக்க ஞானம் , வித்தை யுடையவனாகவும் இருப்பர் .

ஐந்தில் சந்திரனிருக்க நற்புத்தியும் கல்வித்திறனும் உடையவனாகவும்,
- புதனிருக்க ஞானவிருத்தி , நரற்கல்வியாளனாகவும் .

-குரு யிருக்க நற்புத்தி ,சாஸ்திர ஞான முடையவனாகவும் இருப்பான் .

ஒன்பதில் புதனிருக்க பண்டிதனாகவும் அறிஞனாகவும் ,
- குருவிருக்க நல்லறி உடையோனாகவும் இருப்பான் .

பத்தில் புதனிருக்க ஞானியாகவும் ,
- கேது இருக்க விவேகமிக்கவனாகவும் இருப்பான் .

பனிரெண்டில் குரு இருக்க புத்திசாலியாகவும்
- கேது இருக்க ஞான முடையவனாகவும் இருப்பான் .


பாவகாதிபதிகள் மாறிநின்ற பலன்கள் :-
----------------------------------------------------------லக்னாதிபதி பலம்பெற்று 2 ல் இருக்க வாக்குவன்மை கல்வி கேள்விகளின் தேர்ச்சி பெற்றவராக ஜாதகர் திகழ்வார்.
லக்னாதிபதி 4 ல் பலம் பெற்றிருக்க கல்வியில் உயர்ந்த நிலை அடைவார் .
இரண்டாமிடத்து அதிபதி லக்னத்திருக்க அறிவாளியாகவும். பட்டம் பெற்று உயர் பதவி அடைபவனாகவும் இருப்பார் .
இரண்டாம் அதிபதி முன்றில் பல மற்றிருக்க கல்வி ஞானமில்லாதவனாகவும் . கல்வி கற்க சந்தர்பமடையாதவனாகவும் இருப்பான் .
இரண்டாமதிபதி பத்தில் பலமுடன் இருக்க கல்வியில் சிறந்தவனாகவும் ,சாஸ்திர ஆராய்ச்சி , வாதத்திறன் ,ஆசிரியர் ,ஆச்சாரியாராவும் திகழ்வான்.
முன்றாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க சினிமா,நாடகம் ,நாட்டியம்,சங்கீதம் ,என சகலகலா வல்லவனாக இருப்பான் .
 நான்காமதிபதி லக்னத்திலிருக்க (பலமுடன்) கல்வி திறன் மிக்கவன் . ஐந்தாமதிபதி லக்னத்தில் பலமுடன் இருக்க புத்தி , வித்தை , கல்வியிற் சிறந்தவனாகவும் இருப்பான் .
ஐந்தாமதிபதி 4 ல் இருக்க படித்தவர்களின் நட்பு கிடைக்கும்.
 ஐந்தாமதிபதி 5 ல் இருக்க ஜாதகரின் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் . ஐந்தாமதிபதி 6 ல் இருக்க புத்தி அற்றவனாகவும் நினைவாற்றல் இல்லாதவனாகவும் இருப்பான் . ஐந்தாமதிபதி 9 ல் சிறந்த கல்வி , ஒளிமயமான எதிர்காலம் உண்டு .
பத்தாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க ஞானமிக்கவனாக இருப்பான் .
பத்தாமதிபதி 2 ல் (பலம்) வாக்குவன்மை , பேசுந்திரன் இருக்கும் .
பத்தாமதிபதி 5 ல் (பலமுடன்) சாத்திரமறிந்த பண்டிதன் ஆவான் .
பன்னிரெண்டாம் அதிபதி 2 ல் இருக்க கல்வியில் ஆர்வமும் ஊக்கமும் இருக்காது .


கிரக இணைவு பலன்கள் :
கல்வி பற்றி அறிய 2,4,5,11 ம் பாவநிலைகள் ஆராயப்பட வேண்டும் . இத்துடன் 8 , 12 சம்பந்தம் பெற கல்வி சிறக்காது / இருக்காது . 2 ம் பாவம்-ஆரம்பக்கல்வி
4 ,9 ,11 தேர்வுகளில் வெற்றி நான்காம் அதிபதி 4 ,9 ,11 ம் பாவத் தொடர்பு = உயர்கல்வி தொழிற்கல்வி அமையும் . சந்திரன் + செவ்வாய் அல்லது சூரியன் + செவ்வாய் - ராகு கேது தொடர்பு .
4 ,9 ,11 மற்றும் சூரியன் தொடர்பு (கன்னி , சிம்மம் , விருச்சிகம் , மீனம் லக்னம் ) - மருத்துவ கல்விகுரு இணைய = பொது மருத்துவர்
புதன் இணைய = நரம்பியல் நிபுணர்
செவ்வாய் இணைய = அறுவை சிகிச்சை நிபுணர்
சனி இணைய = எலும்பு முறிவு / பல் நிபுணர்
சுக்கிரன் இணைய = கண் மருத்துவர் சிறுநீரகம்
சுக்கிரன் + சந்திரன் = ENT நிபுணர்
சுக்கிரன் + ராகு = எக்ஸ்ரே ஸ்கேன் நிபுணர்
குரு + செவ்வாய் + சூரியன் = ஆயுர் வேத மருத்துவர்
குரு + சூரியன் + சனி = ஹோமியோ மருத்துவர்
சூரியன் + குரு = சித்த வைத்தியர்
சூரியன் + புதன் + குரு = தத்துவ ஞானி
சூரியன் + புதன் = விஞ்ஞானி , நிபுணத்துவம்
10 மிடத்துடன் புதன் தொடர்பு = எழுத்தாளர் ஆவார்
10 மிடத்துடன் சுக்கிரன் தொடர்பு = கவிஞர் ஆவார்
10 மிடத்துடன் குரு தொடர்பு = தத்துவ ஞானி ஆவார் .
6,8,12 ல் ராகு இருந்து ராகு திசையில் படிப்பே வராது .
சந்திரன் + ராகு = நல்ல படிப்பு வரும் .
புதன் + செவ்வாய் = படிப்பில் தடை ஏற்படும் .
2,5,11 சம்பந்தம் - முதுநிலை பட்டம் .
2 மிடம் - பள்ளிபருவம்
4 மிடம் - இளங்கலை , பட்டயப்படிப்பை குறிக்கும் .
2,9,11 - பி , எச் , டி
2,11 - ஆராய்ச்சிப் படிப்பை குறிக்கும்


எந்த நிலைக்கு , என்ன படிப்பு ஏற்படும் ?
1 . மேஷம் , விருச்சிகம் , செவ்வாய் , சந்திரன் ஆகியோர் பலம் பெற்றிருக்க மின்னியலிலும்
2 . மிதுனமும் , செவ்வாயும் பலம் பெற இலக்கியம் மற்றும் தகவல் தொடர்பு துறையிலும்
3 . புதன் , குரு , மிதுனம் , விருச்சிகம் பலம் பெற வானொலி கம்பி இல்லா தகவல் தொடர்பும்
4 . காற்று ராசிகளான மிதுனம் , துலாம் , கும்பம் , சூரியன் , குரு , புதன் , ஏரோ நாட்டிக்கல் , ஏவியேஷன் துறை
5 . மீனம் , தனுசு குரு + சந்திரன் - சுக்கிரன் தொடர்பு = கடல் வழிக்கான துறை வாகனக்கல்வி
மீனம் + தனுசு + குரு + சந்திரன் - செவ்வாய் தொடர்பு = கடற்படை
மீனம் + தனுசு + குரு + சந்திரன் - புதன் தொடர்பு = வணிகம் மற்றும் பொறியியல்
6 . புதன் + குரு - பத்திரிகைத் துறை ( ஜர்னலிசம் )
7 . மேஷம் , செவ்வாய் குரு + சுக்கிரன் = ஆட்டோ மொபைல்
8 . சுக்கிரன் + சூரியன் - குரு தொடர்பு = சினிமாத்துறை
9 . பலம் மிக்க சுக்கிரன் + புதன் + சந்திரன் - சனி தொடர்பு = பொறியியற்கல்வி
10 . சூரியன் + புதன் + குரு தொடர்பு = பட்டயப் படிப்பு , ஆசிரியர் கல்வி
11 . சூரியன் + சனி + புதன் + செவ்வாய் அல்லது ராகு தொடர்பு - சட்டப்படிப்பு
13 . சூரியன் + புதன் + சுக்கிரன் = வணிக நிர்வாகம் (MBA) , கணினியியல் (PGDCA)
- புதன் வலுவுடன் இருந்தாலன்றி பட்டப் படிப்பு சாத்தியமாகாது .
- புதன் வலுவுடன் இருந்தாலும் , 2 ல் தீய கிரகம் இடம் பெற படிப்பில் தடை ஏற்படும் .
- புதன் பலத்துடன் இருந்தாலும் , லக்னாதிபதி பலமற்று 11 ல் இருக்க பட்டப் படிப்பு கேள்வி குறியாகும் . ஆயினும் தொழிற் கல்வி கை கொடுக்கும்
- ரிஷபம் , துலாம் , மகரத்திற்கு புதன் நலந்தரும் கிரகமாகும் .
- மிதுனம் , கன்னிக்கு - நன்மை , தீமை கலந்து தரும் கிரகமாகும் .
- கடகம் , மீனம் , தனுசு, விருச்சிகம் , சிம்மம் , மேஷம் ஆகிய ராசிகளில் தீங்கு செய்தாலும் , 2 ம் அதிபதி பலம் பெற நற்கல்வி அமையும் .


"கைரேகை சாஸ்திரம்" :-
புதன் மேடு வனமாக இருக்க , கல்வியில் சிறந்தவராக இருப்பார் . புதன் மேட்டில் கீழ்க்கண்ட குறிகள் இருக்க ( முக்கோணக் குறி ) - மேடைப் பேச்சாளராகவும் , சூரிய மேட்டில் ( சதுரக் குறி ) இருக்க கலைத்துறையில் புகழ் பெறுவார் . சந்திர மேட்டில் ( வட்டக் குறி ) இருக்க இலக்கியவாதியாவார் .
கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து , புதன் மேடு நோக்கி சிறு சிறு ரேகைகள் இருக்க ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபாடு ஏற்படும் . வாஸ்து :
அறிவை அபரிமிதமாக அளித்து ஞானத்தை பெருக்குபவன் ' ஈசானன் ' ஆவான் .


"நாடி ஜோதிடம்" :-
மேஷத்தில் புதன் :-
(புதன் + செவ்வாய்) , விவசாயம் , கல்வியில் தடை , தொழிற் கல்வி , மருத்துவ அறுவை சிகிச்சை
ரிஷப புதன் :-
(புதன் + சுக்கிரன் ) வணிகவியல் , கணிதம் , சட்டம் , பொருளாதாரம் , ஆகிய கல்விகளும் , கலைத்துறை , ஈடுபாடும் ஏற்படும் .
மிதுன புதன் :-
கணிப்பொறி , கணக்கியல் , வணிகவியல் படிப்புகளும் , எழுத்தாற்றல் , பேச்சாற்றல் , பத்திரிக்கைத்துறை , தகவல் தொடர்பு மற்றும் சிறந்த கல்வியும் உண்டு .
கடக புதன் :-
கலை , இலக்கியம் , மொழிக்கல்வி அமையும் (புதன் + சந்திரன் )
சிம்ம புதன் :-
அறுவை சிகிச்சை ( புதன் + சூரியன் ) பொறியியல் , சித்தா , சமூகவியல் , அரசியல் , தத்துவம் , சம்பந்தப்பட்ட கல்வி சிறக்கும் .
கன்னி புதன் :-
கணக்கியல் , வணிகவியல் , அனைத்து துறைகளிலும் கல்வி சிறக்கும் .
துலா புதன் :-
வணிகவியல் , அழகுக்கலை , சட்டம் , சங்கீதம் , கணக்கியல் , கலைக்கல்வி (சுக்கிரன் + புதன்) .
விருச்சிக புதன் :-
(செவ்வாய் + புதன் ) இயந்திர மற்றும் உலோக சம்பந்தமான கல்வி விவகாரம் , அறுவை மருத்துவக் கல்வி ஏற்படும் .
தனுசு புதன் :-
(குரு + புதன்) தத்துவம் , பொருளாதாரம் , சட்டம் , கணக்கியல்
மகர புதன் :-
(சனி + புதன் ) சுரங்கவியல் , கனிமங்கள் , சம்பந்தமான கல்வி .
கும்ப புதன் :-
(சனி + புதன் ) மனவியல் , தத்துவம் , பொறியியல் , மருத்துவக் கல்வி சிறக்கும் .
மீன புதன் :-
(குரு + புதன் ) சாஸ்திரம் , வணிகவியல் , பொருளாதாரக் கல்வி தேர்ச்சி தரும் .

                                               

                                             புத்த பகவான் ஸ்தோத்திரம்


-" ப்ரயங்கி கலிகா ஸ்யாமம் ரூபேணா பிரதிமம் புதம் ! சௌம்ய சௌம்ய குணோ பேதம்  தம்புதம் ப்ரணமாம் யஹம் !! ( கல்வி ஞானம் பெருகும் )"

                                                                புத காயத்ரி


"ஓம் கஜத் வஜாய வித் மஹே சுக ஹஸ்தாய தீமஹி ! தன்னோ புத பிரச் சோதயாத் !!"
கல்வி சிறக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம் :-
                                                  

                                                 ஹய்கீரிவர் ஸதோத்திரம்     

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம் !]
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ் மஹே !!


எனவே , அன்பர்களே ! கல்விக்கான பலநிலைகளை , கலைமகள் அருளால் ஆய்வு செய்தோம் . பயனுள்ளதாக அமைந்திருக்கும் என எண்ணி நிறைவு செய்கிறேன்